• May 31 2025

"ராஜபுத்திரன்" படத்தினை மக்கள் ஆதரிப்பார்களா.? வெளியான திரைவிமர்சனம் இதோ..!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களின் கால கட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள், பெரும்பாலும் ரசிகர்களைக் கவரும் விதத்தில் காணப்படுகின்றன. இப்போது அதே முயற்சியில் களம் இறங்கியுள்ளார் புதிய இயக்குநர் மகா கந்தன். இவரது இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியான படமே "ராஜபுத்திரன்". 

இப்படத்தில் நடிகர் பிரபு, செல்லையா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தன் ஒரே மகனான பட்ட முத்துவை (வெற்றி) மனம் கனிந்த பாசத்துடன் வளர்க்கின்றார். சிறுவயதில் பெற்ற வளங்களையெல்லாம் இழந்து விட்டாலும், தந்தை – மகன் பாசம் மட்டும் வலியுறுத்தப்படுகின்றது. ஆனால், அந்த பாத்தின் மூலம் வாழ்க்கையின் சோதனைகளை சமாளிக்க முடியுமா என்பது தான் இந்தக் கதையின் மையம்.


படத்தின் ஆரம்பத்தில், குடும்ப சொத்துக்கள் அனைத்தும் விவசாய தோல்வியால் கரைந்துவிட்டன. இந்நிலையில், மகன் பட்ட முத்து வேலைக்குச் செல்ல முடிவெடுக்கின்றான். அவன் வேலை தேடியபடி, வெளிநாட்டிலிருந்து வருகின்ற கருப்பு பணத்தை சட்டவிரோதமாக நகர்த்தும் குழுவில் இணைகின்றான். அந்தக் குழுவின் தலைவர் தான் லிங்கா (கோமல் குமார்).


இந்தப் பணியில் ஈடுபட்ட பின்னர், ஒரு தவறான சூழ்நிலையில் பட்ட முத்து சிக்கிக்கொள்கிறான். அந்த சிக்கல் தான் அவரின் வாழ்வையும், அவரது தந்தையுடனான உறவையும் பாதிக்கிறது. இந்தக் கலவரத்தை அவர் எப்படி சமாளிக்கின்றார் என்பதே படத்தின் கதைக்களம்.

இப்படத்தில் நாயகனாக வெற்றி நடித்துள்ள பட்ட முத்து கதாப்பாத்திரம், ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக இருந்தாலும், கதையின் இடைநிலையில் திடீரென்று விறுவிறுப்பை இழந்துள்ளது. அவரது மன அழுத்தங்களும், தவறாக எடுத்த முடிவுகளும் கதையின் இறுதிப் பக்கத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


படத்தில் இமான் அண்ணாச்சி மற்றும் தங்கதுரை காமெடிக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களின் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் சிரிக்க வைக்கவில்லை. படத்தில் கள்ளுக்கடை மற்றும் கவர்ச்சி கலந்த பாடல் இடம்பெறுகின்றது. இது 90களினை நினைவுபடுத்தும் வகையில் இருந்தாலும், இன்றைய இளைஞர்கள் அல்லது குடும்ப ரசிகர்களுக்கு பிடிக்கின்ற வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது. பாடல்களின் மெலோடிகள் மனதில் நிற்கின்ற அளவிற்கு இல்லை.

அறிமுக இயக்குநர் மகா கந்தனின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது தான். ஒரு தந்தை – மகன் கதையை, நவீன சமூகப் பின்னணியில் சொல்லும் முயற்சி இது. ஆனால், தீவிர திரை அனுபவம் இல்லாத பார்வையாளர்களுக்கு கூட, இது ஒரு சாதாரண பயணமாக காணப்படலாம்.


Advertisement

Advertisement