• May 20 2026

ஆர்.ஜே.பாலாஜியின் மேஜிக்கால் கனவில் சென்ற கருப்பு சாமி… திருச்செந்தூரை அதிரவைத்த சம்பவம்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அரசியல் பின்னணி மற்றும் கடவுள் நம்பிக்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


இந்நிலையில், திருச்செந்தூர் பகுதியில் நடந்த ஒரு வியப்பூட்டும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அங்கு உள்ள ஒரு தியேட்டரில், ‘கருப்பு’ திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற கனவு ஒருவருக்கு வந்ததாக கூறப்படுகிறது. அந்த கனவு அனுபவத்தை நம்பிய அந்த நபர், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சேர்த்து மொத்தம் 217 பேரை ஒரே நேரத்தில் தியேட்டருக்கு அழைத்து வந்து, ஒரே காட்சியில் படம் பார்க்கும் வகையில் புக் செய்துள்ளார்.

இந்த நிகழ்வு தியேட்டர் ஊழியர்களையும் பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இத்தனை பேர் ஒரே நேரத்தில் படம் பார்க்க வந்தது அரிதான நிகழ்வாக கருதப்படுகிறது. படம் பார்த்த பிறகு பலரும் உணர்ச்சி பொங்க கருத்துகளை பகிர்ந்துள்ளனர். “இப்படிப்பட்ட நல்ல கதையுள்ள படங்கள் தொடர்ந்து வர வேண்டும்” என ஒருவர் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து, ‘கருப்பு’ படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. படத்தின் தாக்கம் ரசிகர்களை இப்படியொரு மனநிலையில் இழுத்துச் சென்றிருப்பது சினிமா வட்டாரத்திலும் பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement