தமிழ் சினிமாவில் சமீப காலமாக பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு உருவாகும் ஆக்ஷன் படங்கள் அதிக கவனம் பெறத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில், நடிகை சாய் தன்ஷிகா நடிப்பில் உருவான புதிய படம் ‘யோகிடா’, நேற்று அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் வெளியீட்டுக்கு முன்பே, ஒரு பெண் மையக் கதைக்களம் மற்றும் ஆக்ஷன் ஜானர் என்பதால் சில எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.
இந்த படத்தை கவுதம் கிருஷ்ணா இயக்கியுள்ளார். சாய் தன்ஷிகா, ஏற்கனவே பல படங்களில் வலுவான கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் கொண்டவர் என்பதால், ‘யோகிடா’ படமும் அவரது கரியரில் ஒரு முக்கியமான முயற்சியாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ‘யோகிடா’ படத்தின் முதல் நாள் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. திரைப்பட வசூல் கணக்குகளை வெளியிடும் சாக்னிக் (Sacnilk) வலைத்தளத்தின் தகவலின்படி, ‘யோகிடா’ படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் வெறும் 17 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசூல் எண்ணிக்கை சினிமா வட்டாரங்களில் சுமாரான வரவேற்பாகவே கருதப்படுகிறது. குறிப்பாக, இன்றைய காலகட்டத்தில் முதல் நாள் வசூல் தான் ஒரு படத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக பார்க்கப்படும் நிலையில், இந்த தொடக்கம் தயாரிப்பு தரப்புக்கு சிறிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Listen News!