• May 06 2024

எனக்கு அதிகமாக சாறி வாங்கிக் கொடுத்ததே அவர் தான், அப்பா கூட எல்லாம் போட்டி போட முடியாது- ஓபனாகப் பேசிய ஸ்ருதிஹாசன்

stella / 6 months ago

Advertisement

Listen News!


நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தன் தந்தையை போலவே சினிமாவில் பன்முகத்திறமை கொண்டவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவருக்கு தற்போது தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் தெலுங்கு திரையுலகம் பக்கம் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார். 

அங்கு இவருக்கு தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. பொங்கலுக்கு ரிலீஸ் ஆன சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பால கிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய இரண்டு படங்களிலும் ஸ்ருதி தான் ஹீரோயினாக நடித்திருந்தார்.


தற்போது இவர் நடிப்பில் தெலுங்கில் சலார் திரைப்படம் தயாராகி வருகிறது. கே.ஜி.எஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் இப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. 

இதுதவிர தி அய் என்கிற ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இப்படத்தின் படப்பிடிப்பும் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இவர் பிரபல புடைவைக் கடையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது செய்தியாளர்களையும் சந்தித்து பேசியுள்ளார்.


அதில் அவரிடம் எனக்கு மாடர்ன் ஆடை மட்டும் இல்ல ட்ரெடிஸனலாக ட்ரெஸ் போடுறதும் ரொம்ப பிடிக்கும்.எனக்கு அதிகமாக எங்க அப்பா தான் சாறி வாங்கிக் கொடுத்திருக்கிறாரு. நான் தமிழ் பொண்ணு தான். தமிழில் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் கட்டாயம் நடிப்பேன். நான் நடிக்கும் கதாப்பாத்திரம் எனக்கும் பிடிச்சிருக்கனும்.

அப்பிடி பிடிச்சிருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். அத்தோடு  எனகக நடிப்பு மட்டுமே போதும் இயக்குநராக ஆகவேண்டும் என்றெல்லாம் ஐடியா இல்லை,அப்பா கூட போட்டிக்கு நடிக்கனும் என்றெல்லாம் நான் யோசிச்சதே இல்லை.நான் என்னோட வேலையை மட்டும் பார்த்திட்டு இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement