• May 19 2024

சிவகார்த்திகேன் பண்ணியது மிகப் பெரிய துரோகம்- இனிமேல் அது நடக்காது- கடும் கோபத்தில் இருக்கும் டி. இமான்

stella / 7 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய மாவீரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள அலான் திரைப்படம் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது.

அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரையும் கவர்ந்திருந்தது.சிவகார்த்திகேயன் கெரியரில் ஆரம்ப கட்டத்தில் நடித்த படங்களுக்கு இசையமைத்து ஹிட் கொடுத்தவர் டி.இமான்.


மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் தொடங்கி நம்ம வீ ட்டு பிள்ளை வரை சிவகார்த்திகேயனுக்கு பல ஹிட் பாடல்கள் இமான் கொடுத்து இருக்கிறார். ஆனால் தற்பொழுது இவர்கள் இருவரும் கூட்டணி அமைக்காமல் இருக்கின்றனர்.

இதனால் இதற்கு என்ன  காரணம் என சமீபத்திய பேட்டியில் இமான் தெரிவித்து இருக்கிறார்.சிவகார்த்திகேயன் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம். அதை வெளியில் சொல்ல முடியாது. அவர் உடன் இனி இந்த ஜென்மத்தில் சேர்ந்து பயணிக்க மாட்டேன். அடுத்த ஜென்மத்தில் நான் இசையமைப்பாளராக இருந்தால் பார்க்கலாம்.


"அந்த துரோகம் பற்றி அவரிடமே கேட்டுவிட்டேன், அவர் என்ன பதில் சொன்னார் என்பது பற்றி வெளிப்படையாக கூற முடியாது. சில விஷயங்களை நான் மூடி மறைக்கிறேன் என்றால் அதற்கு குழந்தைகள் எதிர்காலம் தான் காரணம்" என்றும் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement