• May 08 2024

கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட பிக்பாஸ் தொகுப்பாளர்... அவருக்கு பதிலாக இனி இவர் தானாம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக உலகளவில் அதிகம் பரவி வருகின்ற நோய்களில் ஒன்றாக டெங்கு காய்ச்சல் காணப்படுகின்றது. இது இந்தியாவிலும் படுவேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு பொதுமக்கள் மட்டுமன்றி பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. 


அந்த வரிசையில் தற்போது பிரபல நடிகர் சல்மான் கானுக்கும் டெங்கு ஏற்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அதாவது இவர் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை வெகு சிறப்பாக தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த ரியாலிட்டி ஷோ ஆனது 15 சீசன்களைக் கடந்து விட்ட நிலையில் தற்போது 16 ஆவது சீசன் இடம்பெற்று வருகின்றது.


இந்தியாவில் மட்டுமன்றி உலகளவில் மிகப் பிரபலமாக இருக்கும் பிக்பாஸ் ஷோ முதலில் ஹிந்தியில் தான் ஒளிபரப்பானது. இந்த ஷோவை சல்மான்கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார். முன்னதாக இவரது சம்பளம் குறித்தான பல சர்ச்சைகள் கிளம்பி இருந்தது. இதற்கான விளக்கங்களையும் சல்மான் கான் பல பேட்டிகளின் வாயிலாக அளித்திருந்தார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி எபிசோடுகளை தொகுத்து வழங்கி வந்த இவருக்கு சமீபத்தில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் சல்மான்கான். இந்நிலையில் இவருக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது யார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.


அதற்காக பல முன்னணி நடிகர்களையும் பரிந்துரை செய்து விட்டனர் நெட்டிசன்கள். அதாவது கரண் ஜோஹர் ஐ பலரும் கூறி வருகின்றனர். முன்னதாக இவரினுடைய நிகழ்ச்சியில், சமந்தா, அக்ஷய் குமார், விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களது அந்தரங்க வாழ்க்கை குறித்து பேசி இருந்தது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியிருந்தது. 


மேலும் எந்த கேள்விகளுக்கும் அஞ்சாத கரண் ஜோஹர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement