• Apr 15 2026

அவருக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்புண்டு..! நந்தினி சீரியல் நடிகரின் மனைவி போலீஸ் கம்ப்ளைன்ட்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான 'நந்தினி' தொடர் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ராகுல் ரவி. அதன்பின், மாடலிங்கில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்ததோடு, 2013 ஆம் ஆண்டு நடிகராகவும் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு காதலித்து வந்த லட்சுமி நாராயணன் என்ற பேஷன் டிசைனரை திருமணமும் செய்துள்ளார்.


இந்த நிலையில்,  நடிகர் ராகுல் ரவி மீது அவருடைய மனைவி போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாக ராகுல் ரவி தலைமறைவு ஆகிட்டார் என செய்திகள் பரவி வருகிறது.


அதன்படி, ராகுல் ரவிக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பு உள்ளதென குற்றச்சாட்டு ஒன்றை வைத்து போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறாராம் அவரது மனைவி.

இதேவேளை, திருமணமான புதியதில் ராகுல் ரவியும் லட்சுமியும் நன்றாக தான் வாழ்ந்து வந்து இருக்கிறார்கள். எனினும் தற்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement