• Sep 20 2024

மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் மகனை தெரியும் மகளை பார்த்துள்ளீர்களா-வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது காந்தக் குரலால் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் தான் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஆகிய மொழிகளிலும் எக்கச்சக்கமான பாடல்களைப் பாடி இருக்கின்றார்.

கேட்பவரை மெய் சிலிர்க்க வைக்கும் அளவு பல பாடல்களைப் பாடிய இவர் கடந்த ஆண்டு கொரோனா தோற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சையில் இருந்து வந்த எஸ்.பி.பி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது இறப்பு திரையுலகிற்கு பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது.இருப்பினும் பல மேடைகளிலில் இவர் பாடிய பாடல்களை தற்கால பாடகர்கள் பாடி அவரை நினைவுபடுத்தி வருகின்றனர்.

மேலும் பாடகர் எஸ்.பி.பிக்கு எஸ்.பி.சரண் எனும் ஒரு மகன் இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். ஆனால், எஸ்.பி.பிக்கு பல்லவி எனும் ஒரு மகள் இருக்கிறார். 





அவரின் புகைப்படம் ரசிகர் மத்தயில் வைரலாகி வருகின்றது.இதோ அந்த புகைப்படங்கள்....










Advertisement

Advertisement