• May 07 2024

நடிகர் பாண்டியராஜனின் அழகிய குடும்பத்தைப் பார்த்திருக்கின்றீர்களா?- இணையத்தில் வைரலாகி வரும் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

1985 ஆம் ஆண்டு வெளியாகிய கன்னிராசி என்ற படத்தின் இயக்குநராக திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் பாண்டியராஜன். இதனைத் தொடர்ந்து ஆண்பாவம், மனைவி ரெடி, நெத்திஅடி என பல படங்களில் நடித்துள்ளார் . இதனால் இவரை எல்லோரும் புதுமைக் கலை மன்னன் என்று தான் அழைப்பார்கள்.

இது தவிர தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா, ஒளிப்பதிவாளர் நித்யா, நடிகர் மயில்சாமி, நடிகை சீதா இவர்களை அறிமுகப்படுத்தியதும் இவர் தான். சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தின் மூலம் ரி என்ட்ரி கொடுத்திருந்தார்.

அத்தோடு 1986 ஆம் ஆண்டு வாசுகி என்பவரை பாண்டியராஜன் திருமணம் செய்து கொண்டார் .இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர் .அதில் இரண்டாவது மகனாகிய பிரத்திவ் ராஜன் படங்களில் நடித்து வருகின்றார் .கடந்த 2006ஆம் ஆண்டு தன் அப்பா பாண்டியராஜன் இயக்கத்தில் ‘கைவந்த கலை’ என்ற படத்தில் அறிமுகம் ஆனார்.

அவர் தற்போது ஸ்ட்ரீட் லைட்ஸ் என்ற படத்தில் நடித்து வருகின்றார் . இந்நிலையில் பாண்டியராஜன் தன்னுடைய மனைவி மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தகங்களில் பகிர்ந்துள்ளார் . அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/zLrMOjBkRZU

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement