விஜய்டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இதில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் தான் கோபிநாத். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.
கோபி நாத் நீயா நானா என்ற நிகழ்ச்சியைத் தான் தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிகழ்ச்சியானது கடந்த 2006ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதோடு இன்றும் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றது.
கோபிநாத் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தான் அறிமுகமானார். அதன் பின்னர் ஜெயா டிவி, என்டிடிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி தான் விஜய் டிவியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்தும் வருகின்றார்.
இந்நிலையில், தொகுப்பாளர் கோபிநாத்தின் தாய், தந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் கோபிநாத்தின் தந்தை கடந்த 2020ஆம் ஆண்டு மறைந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..
Listen News!