• May 04 2024

தனது மும்பை வீட்டிற்கு ஹிந்தியில் பெயர் வைத்துள்ளாரா சூர்யா? புதிய சர்ச்சையை கிளப்பிய பரபரப்பு தகவல்...!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து கொண்டு இருக்கிறார் நடிகர் சூர்யா.

இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளிவந்து இருந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது.

தற்போது நடிகர் சூர்யாவின் 42வது படத்தை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார். இப்படமானது 3d கிராபிக்ஸ் கொண்டு உருவாக்கப்படுகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீஷா பதானி நடித்து வருகிறார். அதோடு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் மும்பையில் சூர்யா சொந்தமாக வீடு வாங்கி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, நடிகர் சூர்யா அவர்கள் தன்னுடைய மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் குடியேறி இருக்கிறார்.

இந்நிலையில் அவர் வாங்கிய வீட்டிற்கு ஹிந்தியில் பெயர் வைத்துள்ளார் என்ற புது சர்ச்சை கிளம்பியது . அந்த வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வந்தது.இந்நிலையில் அது தொடர்பான உண்மை தகவல் வெளியாகியுள்ளது.என்னவெனில் கடந்த மார்ச் 5 ஆம் திகதி யப்பானிஸ் ஹோட்லுக்கு  போய் இருக்காரு. அவர் அங்கிருந்து வெளிய வாற வீடியோவை பலரும் பகிர்ந்து வந்திருக்கிறார்கள் .உண்மையில் அது சூர்யாவின் வீடு அல்ல ..அந்த வீடியோவில் இருந்தது அந்த ஹோட்டலின் பெயர் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது  குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement