• May 18 2024

அரசு மற்றும் குணசேகரனுக்கு இடையில் முற்றிய வாக்குவாதம்.. பதற்றத்தில் அப்பத்தா... ஆதிரை நிச்சயதார்த்தம் நடக்குமா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது தினந்தோறும் அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வகையில் விறுவிறுப்புடன் நகர்ந்து கொண்டிருக்கின்றது. 

அந்தவகையில் ஆதிரைக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.எழுந்துள்ளது. இவ்வாறு இருக்க தற்போது இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ  வெளியாகி இருக்கின்றது.


அதில் அரசு "கதிர் எங்க என்று கேட்டால் தூங்கிறான் என்று சொன்னீங்க" எனக் கூறி கோபத்தில் கூச்சலிடுகின்றார். அதற்கு குணசேகரன் "என் தம்பி வருவான்யா எதுக்கு இவ்வளவுக்கு எகிறுறாய் நீ" எனக் கூறுகின்றார். 

மேலும் ஜனனி "எப்பிடி மாம் இதெல்லாம் கேட்டிட்டு பேசாமல் இருக்கீங்க" என கேட்கின்றார். பின்னர் ரேணுகா கதிரை எழுந்திருக்குமாறு எழுப்புகின்றார். பின்னர் அப்பத்தா "இந்த நிச்சயதார்த்தம் நடக்கணுமா வேணாமா..?" என சற்று பதற்றத்துடன் குணசேகரனை பார்த்து கேட்கின்றார். அதற்கு குணசேகரன் "அதற்காக தான் போராடிட்டு இருக்கோம்" எனக் கூறுகின்றார்.


Advertisement

Advertisement