• May 19 2024

செல்வியிடம் வாக்குவாதம் பண்ணி பாக்கியாவிடம் வாங்கிக் கட்டிய கோபி- ராதிகாவை வைத்து கிண்டலடித்த செழியன்- திட்டிய ராமமூர்த்தி

stella / 11 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

வீட்டிற்கு வந்த கோபி தன்னுடைய பெற்றோருடன் பழனியின் அம்மா பேசுவதைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றார்.பின்னர் மேலே சென்று பாக்கியா பழனிச்சாமியையும் அவரது அம்மாவையும் வழி அனுப்பி வைப்பதற்காக வாசலில் நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றார்.பாக்கியா நீண்ட நேரம் அவர்களிடம் பேசிவிட்டு வழி அனுப்பி வைப்பதை பார்த்து வயிறெரிய அந்த நேரம் செழியன் போன் பேசுவதற்காக மேலே வருகின்றார்.


செழியனிடம் பழனி பற்றி கேட்க செழியன் பழனி சாமி அங்கிள் ரொம்ப ஜாலியா பேசுறாரு நல்லவரு என்று சொல்லி பாராட்டி விட்டு உங்களுக்கும் ராதிகாவுக்கும் ஏதாவது சண்டையா எனக் கேட்ட கோபி அப்படி ஒன்றுமில்லையே என்று சொல்ல, அவங்க கூட சண்டை போட்டால் தானே இப்படி இருப்பீங்க என்று சொல்லி விட்டு செல்ல கோபி புலம்புகின்றார்.

பின்னர் கிச்சனுக்குள் செல்வியும் பாக்கியாவும் பேசிட்டு இருக்கும் போது பாக்கியாவிடம் கோபி வந்து நீ பண்ணுறது எல்லாம் சரியா என்று கேட்க செல்வி கோபியை நக்கலடிக்க கோபி செல்வியைத் திட்டுகின்றார். இதனால் கடுப்பான பாக்கியா எழும்பியதில் இருந்து துாங்கும் வரை நான் என்ன பண்ணுறேன் என்று தான் யோசிச்சிட்டு இருப்பீங்களா. இதுக்கு மேல என்னை குழப்பினீங்க என்றாள் அவ்வளவு தான் முதலில் இங்க இருந்து போங்க என்று சொல்லி திட்ட கோபியும் அங்கிருந்து கிளம்புகின்றார்.அப்போ செல்வி கோபி சேர் உனக்கு தான் கல்யாணம் என்று நினைச்சிட்டு இருக்காரு போல அதான் இப்படி எல்லாம் நடந்துக்கிறாரு என சொல்கிறார்.


பின்னர் இனியா சுவீஸ்ட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கோபி சென்று பழனிச்சாமி கிட்ட பேசாத என்று சொல்ல இனியா நான் பேசுவேன் அவரு ரொம்ப நல்லவரு என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்புகின்றார். கோபி என்ன செய்வது என்று புலம்பும் நேரத்தில் ராமமூர்த்தி வர ராமமூர்த்தியிடமும் அப்பா நீங்க பண்ணுறது எதுவும் நல்லதில்லை, எங்க குடும்ப கௌரவம் என்ன ஆகிறது என்று சொல்ல ராமமூர்த்தி கோபியைத் திட்டுகின்றார்.கோபி எல்லோருக்கும் பைத்தியம் பிடிச்சிருக்கு என்று நினைக்கிறார்.

பின்னர் ரூமுக்குள் இருக்கும் போது ராதிகா உங்க வீட்டில ஏதும் விசேஷமா என்று கேட்க கோபி ஆமாம் கேட்டா நீயே ஷாக் ஆகிடுவ பாக்கியாவுக்கு கல்யாணம் என்று சொல்ல ராதிகா அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement