• Jul 04 2024

பாக்கியாவை அசிங்கப்படுத்திய கோபி மற்றும் ராதிகா- ராமமூர்த்தி கொடுத்த பதிலடி- கடும் குழப்பத்தில் இருக்கும் பாக்கியா

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா கிச்சனில் தனியாக நின்று வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் கோபி இது உனக்கு நல்லா இருக்கு எதுக்கு அந்த லாம் போஸ்ட் உடன் பாண்டிச்சேரிக்கு வந்த, என் கிட்ட எல்லோருமே வந்து கேட்டாங்க எதுக்கு நீ இப்படிப் பண்ணிட்டு இருக்கிற என்று கேட்க பாக்கியா ரோட்டில போறவங்களுக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது என்கிறார்.


தொடர்ந்து பாக்கியா உங்க கிட்ட சொன்னவங்க தான் என் கிட்டையும் ஒன்று சொன்னாங்க டிவோஸ் வாங்கி வேற கல்யாணம் பண்ணினப் பிறகும் எதுக்காக உங்க பின்னாலேயே சுத்திட்டு இருக்காரு, அவருக்கு வெட்கமா இல்லையா என்றுகேட்டாங்க என்று சொல்ல கோபி அதிர்ச்சியடைகின்றார்.

அத்தோடு பாக்கியா நான் என்ன பண்ணுறேன் என்று வீட்டில உள்ளவங்களுக்கு தெரியும். நிங்க அதைப் பற்றி எல்லாம் கேட்காதீங்க என்று சொல்லி விட்டு கிளம்புகின்றார்.பின்னர் கான்டீனில் ராதிகா இருந்து கொண்டு பாக்கியாவை சுடக்குப் போட்டுக் கூப்பிட்டு காஃபி கேட்கின்றார். தன்னுடைய காஃபியில் சுகர் போடல என்று சொல்லி மறுபடியும் கஃபி போடச் சொல்கின்றார்.


பெின்னு வீட்டுக்கான 18 லட்சம் காசினைக் கொடுக்க இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு அதை எப்பிடிக் கொடுப்பீங்க,வேணும் என்றால் நான் அந்தப் பணத்தைக் கொடுக்கவா என அசிங்கப்படுத்த பாக்கியா வேணாம் என்று அங்கிருந்து கிளம்புகின்றார். பின்னர் வீட்டுக்கு வந்த பாக்கியா ஆடர் எடுத்து சமைச்ச காசு, காண்டீனுக்கு மலிகை சாமான் வாங்க வைத்திருந்தகாசு எல்லாவற்றையும் ஜெனியை வைத்து கூட்டிப் பார்க்கின்றார்.

அப்போது எட்டு லட்சம் பணம் தான் இருக்கு என்று ஜெனி சொல்ல, எழில் கவலைப்படாதம்மா ஏதாவது செய்து பணத்தை திரும்பக் கொடுத்திடுவோம் என்று சொல்கின்றார். பின்னர் பாக்கியா தனியாக இருக்க கோபி வீட்டுக்கு பணம் கொடுக்க இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு உன்னால முடியுமா என நக்கலடிக்கின்றார்.


அதைப் பார்த்துக் கொண்டிருந்த ராமமூர்த்தி கோபியைத் திட்டி அனுப்புகின்றார் பாக்கியாவுக்கும் ஆறுதல் சொல்லுகின்றார்.பின்னர் செழியனுக்காக காத்திருந்த ஜெனி வீட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும். நாங்களும் கொஞ்சமாவது கொடுக்கனும் என்று சொல்ல செழியன் யோசிக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement