• May 12 2024

ஓவராக உருட்டி சப்ஜெட்டுக்கு வந்த கோமதி! மீண்டும் விபரீத முயற்சியில் ராஜி? பாக்கியா தலைக்கு வந்த அடுத்த பிரச்சனை?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி. இந்த இரண்டு சீரியல்களும் மகா சங்கமும் என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆக இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. 

இந்த நிலையில், இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், கோவிலில் ராஜியை பார்த்த கோமதி, அவரை திட்டி அடிக்கிறார். கோவிலில் இருந்த ஆட்கள் எல்லாரும் அவர்களை பார்க்க, பாக்கியா வந்து தடுத்து அவர்களை ரூம்க்கு அழைத்து செல்கிறார்.

ரூம்க்கு வந்த கோமதி, அங்கேயும் கண்ணன் விஷயத்தை கேட்டு ராஜியை திட்டி அடிக்கிறார். அதன் போது, கண்ணன் மிரட்டியது, நகை எடுத்து வந்தது என எல்லா விஷயங்களையும் ராஜி சொல்லுகிறார். கோமதி, முத்து அண்ணா தவறான முடிவு எடுத்த விஷயத்தை சொல்ல, கதறி அழுகிறார் ராஜி.


இன்னொரு பக்கம், எழிலும், கதிரும்  ராஜி பற்றிய விஷயங்களை கதைக்கிறார்கள். கதிர், ஏற்கனவே நான் ராஜியை கண்டித்த விஷயத்தையும் சொல்கிறார்.

மறுபக்கம், கோமதி, பாக்கியாவும் ராஜியை அவரின் வீட்டில் பேசி கொண்டு போய் விடுமாறு பேசிக் கொண்டு இருக்க, அவன் நகை மட்டும் தான் எடுத்துட்டு போனானோ இல்ல, ராஜியை ஏதும் தப்பா பயன்படுத்தி இருப்பானோ என்ற வகையில் கோமதி கதைக்க, இதைக் கேட்ட ராஜி, நான் அப்படி பட்ட பொண்ணு இல்ல, அவன் கூட நம்பி வந்தது தான் நான் பண்ணின தப்பு. வேற ஒன்றும் எங்களுக்கு உள்ள நடக்கல என சொல்லி அழுகிறார்.

இதையடுத்து ரூம்க்கு சென்ற ராஜி, கதவை அடைத்துக் கொண்டு, தவறான முடிவு எடுக்க துணிய, அனைவரும் ஒருமாதிரி வந்து ராஜியை காப்பாத்துகிறார்கள்.

பிறகு, கோமதி ஒரு திட்டம் போட்டு, பாக்கியாவிடம் கண்ணீர் மல்க உதவி கேட்கிறார். அதற்கு பாக்கியாவும் சம்மதம் சொல்கிறார்.

அதன்பின், கதிரிடம் பேசிய கோமதி, அம்மா ஒரு உதவி கேப்பன் எனக்காக செய்வியா என்று கேட்டு, ராஜியை கல்யாணம் பண்ணுமாறு சொல்லுகிறார். இதைக் கேட்டு கதிரும், மீனாவும் அதிர்ச்சி அடைகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement