• May 19 2024

அமிர்தாவை நேருக்கு நேர் சந்தித்த கணேஷ்! பேரதிர்ச்சியில் எழில்! பூகம்பமாய் வெடித்த புதிய பிரச்சனை

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலக்சுமி. அதில் அடுத்து என்னநடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

அதன்படி, அதில் எழில், அமிர்தா, நிலா என மூவரும் குடும்பமாக கோவிலுக்கு செல்கின்றனர்.


இதன் போது, சாமி கும்பிட்டுவிட்டு கோவிலில் அமர்ந்து இருக்க, அமிர்தா மட்டும் நிலாவுக்கு வேண்டுதல் இருக்கு, செய்துட்டு வாறேன் என மீண்டும் கோவிலுக்கு உள்ளே செல்கிறார்.


இந்த நிலையில், கணேசும் அந்த இடத்திற்கு வந்து அமிர்தாவை பார்த்து அழைக்கிறார். கணேஷை பார்த்து அதிர்ச்சியடைந்த அமிர்தா, பதறி அடித்துக் கொண்டு எழிலிடம் வருகிறார்.


அதன்படி, எழிலிடம் வந்தவர் நடந்தவற்றை சொல்ல முயலும் போது, மயங்கி விழ, கணேஷ் வந்து எழிலின் கையை பிடிக்கிறார். இதுதான் இன்று வெளியான ப்ரோமோ...


Advertisement

Advertisement