• Apr 28 2024

ராஷ்மிகாவை அசிங்கப்படுத்திய காந்தாரா பட நடிகர்! கன்னட திரையுலகில் வெடித்த பூகம்பம்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் மட்டுமின்றி கன்னட திரையுலகிலும் பப்ளிசிட்டிக்காக புதிய சர்ச்சைகளை கிளப்பி விடுகின்றனர். தற்போது யை AI தொழிநுட்ப வசதியால் ஒருபக்கத்தில் நடிகைகள் கஷ்டப்பட்டாலும் இன்னொரு பக்கம் தமது வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்கின்றனர்.

அதன்படி, கன்னட திரையுலகில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, தமிழ், இந்தி என தனது நடிப்புத்துறையில் முன்னேறிக் கொண்டே செல்கிறார். 

எனினும், அவர் தனது சொந்த மண்ணை மறந்து நடப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2 படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் கன்னட சினிமாவை உலகம் முழுக்க பிரபலமாக்கினார். ஆனால், தற்போது பிரபாஸின் சலார் படத்துக்காக டோலிவுட்டுக்கு சென்று விட்டார்.


இந்நிலையில், கன்னட சினிமாவில் தமது பயணத்தை ஆரம்பித்த அவர்கள் இருவரையும் சுட்டிக் காட்டிய காந்தாரா படத்தின் இயக்குநரும் ஹீரோவுமான ரிஷப் ஷெட்டி, அவர்களை வேணும் என்றே அசிங்கப்படுத்தி பேசியுள்ளார் என சர்ச்சையொன்று கிளம்பியுள்ளது.

கன்னட திரையுலகில் 'காந்தாரா' திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. அத்துடன், வெறும் 16 கோடி பட்ஜெட்டில் உருவான அந்த படம் 400 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றது. அதன் இரண்டாம் பாகத்திற்கான டீசர் சில நாட்கள் முன்பு தான் ரிலீஸ் ஆனது.


இவ்வாறான நிலையில், குறித்த  காந்தாரா 2 பட டைட்டில் டீசர் வெளியிட்டு  விழாவில் பேசிய அவர், கன்னட திரையுலகுக்கு ஒரே ஒரு ஹிட் கொடுத்து விட்டு சாண்டல்வுட்டை விட்டு ஓடிப் போக மாட்டேன் என கூறியிருந்தார்.

இது ராஷ்மிகா மற்றும்  பிரசாந்த் நீலை குத்திக் காட்டி பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் அவர்கள் வேறு திரையுலகில் சென்றது தானாம். இச் சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


 

Advertisement

Advertisement

Advertisement