தளபதி விஜய் பற்றி த்ரிஷா தெரிவித்துள்ள தகவலை கேட்டு ரசிகர்களால் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியவில்லை.
நண்பர் விஜய் குறித்து த்ரிஷா கூறியதை பலராலும் நம்ப முடியவில்லை.
தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான கில்லி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மேலும் அந்த படத்தில் விஜய், த்ரிஷா இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பராக இருந்தது. அதன் பின்னர் விஜய்க்கு ராசியான ஹீரோயினாகிவிட்டார் த்ரிஷா. இந்நிலையில் தான் த்ரிஷா ஒரு விஷயம் சொல்லியிருக்கிறார்.
மேலும் விஜய் பற்றி த்ரிஷா அண்மையில் கூறியதாவது, எனக்கு பிடித்த நடிகர் விஜய். கில்லி படத்தில் நடித்தபோது எங்களுக்கு இடையே ராப்போ இல்லை. எங்களுக்கு இடையே கெமிஸ்ட்ரியை கொண்டு வர படக்குழு கஷ்டப்பட்டது என்றார். என்னாது, விஜய்க்கும், த்ரிஷாவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி இல்லாமல் இருந்ததா என ரசிகர்கள் வியக்கிறார்கள்.
நயன்தாராவும், த்ரிஷாவும் நல்ல தோழிகள். ஆனால் ஆரம்பத்தில் அவர்களுக்கிடையே பிரச்சனையாக இருந்தது. மேலும் அது குறித்து த்ரிஷா தெரிவித்ததாவது…,
சில பொதுவான நண்பர்களால் எனக்கும், நயன்தாராவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் அதை மறந்து பேசிவிட்டோம். எனக்கு நல்லது நடக்க வேண்டுமென்று அவரும், அவருக்கு நல்லது நடக்க வேண்டுமென்று நானும் விரும்புகிறோம் என்றார்.
அத்தோடு மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்துள்ளார் த்ரிஷா. அது மிகவும் முக்கியமான கதாபாத்திரமாகும். 96 படத்தை அடுத்து பொன்னியின் செல்வன் த்ரிஷாவுக்கு பெரிய அளவில் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் எப்படி காட்சிபடுத்தியிருக்கிறார் என்பதை பார்க்க பலரும் ஆவலாக இருக்கிறார்கள்
Listen News!