தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமான இவர் எந்தளவிற்கு படங்களில் நடிக்கின்றாரோ, அந்தளவிற்கு காதல் சர்ச்சைகளில் சிக்கி வருகின்ற ஒருவராகவும் இருந்து வருகின்றார்.
இவரை போலவே சினிமாவில் முன்னணி பெண் நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. விஜய், சூர்யா, ஜீவா எனப் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள இவருக்கு பெரியளவிலான ரசிகர்கள் பட்டாளமே உண்டு. மேலும் இவர் நடிப்பில் அடுத்ததாக 'சகுந்தலம், யசோதா' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
தமிழ்,தெலுங்கு எனக் கொடி கட்டிப் பறந்து வந்த இவர் தற்போது ஹிந்தியிலும் கால்பதித்துவிட்டார். அந்தவகையில் அக்ஷய் குமார், ரன்பீர் கபூர், ஆயுஷ்மான் குரானா என தொடர்ந்து மூன்று முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார்.
இவ்வாறாக பல படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்ற சமந்தா பிரபல தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டமை நம் அனைவருக்கும் தெரியும்.
எனினும் இத்திருமண வாழ்க்கையானது சிறுது காலத்தின் பின்னர் விவாகரத்தில் முடிவடைந்து இருக்கின்றது. எனினும் இதனால் சோர்ந்து விடாத இருவரும் தற்போது தத்தமது வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது நடிகை சமந்தா சிம்புவுடன் நெருக்கமாக இருக்கும் சில போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனைப் பார்த்த பலரும் இருவரும் காதலிக்கின்றார்களா என்ற குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆனால் இவ்வதந்திகளுக்கும், குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த புகைப்படங்கள் அனைத்தும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது எனக் கூறப்படுகின்றது.
அதாவது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சிம்புவுடன் இணைந்து சமந்தா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!