• May 04 2024

திருமணப் பேச்சை தொடர்ந்து அருந்ததியாய் மாறிய அனுஷ்கா... இதன் பின்னணி என்ன... குழப்பத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் உச்சத்தில் இருக்கும் பெண் நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை அனுஷ்கா. இவர் தெலுங்கில் 'சூப்பர்' என்ற திரைப்படத்தின் மூலமாகவும், தமிழில் மாதவனின் 'ரெண்டு' என்ற திரைப்படத்தின் மூலமாகவும் அடியெடுத்து வைத்தார். 


குறையாத அழகும், கொட்டித் தீர்க்கும் கவர்ச்சியுமாக கலங்கடித்த அனுஷ்காவின் மார்க்கெட்டை உச்சத்துக்கு கொண்டு சென்ற படம் என்றால் அது 'பாகுபலி' தான்.

இதனைத் தொடர்ந்து சில வருடங்களாகவே பிரபாஸுக்கும் அனுஷ்காவுக்கும் காதல் இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன. இருப்பினும் அந்த செய்தி உண்மையில்லை எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அந்தகி காதல் வதந்தி ஊற்றெடுத்துள்ளது.


அதாவது சமீபத்தில் பிரபாஸின் பெரியப்பாவும் நடிகருமான கிருஷ்ணம் ராஜூ காலமாகி இருந்தார். அவர் சிகிச்சைப் பெற்றுவந்த போது, பிரபாஸும் அனுஷ்காவும் ஒன்றாக மருத்துவமனைக்கு போய் கிருஷ்ண ராஜூவை நலம் விசாரித்து வந்தனர்.

இது குறித்த போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக, ரசிகர்கள் மீண்டும் பிரபாஸ் - அனுஷ்கா காதல் கதையை பேசத் தொடங்கியுள்ளனர்.

மேலும் மறைந்த கிருஷ்ணம் ராஜூவின் கடைசி விருப்பமும் பிரபாஷ் - அனுஷ்காவின் திருமணம் தான் என்பதால் அவர்கள் இருவரும் திருமணம் செய்யப் போறார்கள் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன. எது எவ்வாறாயினும் இந்த திருமண வதந்திகள் குறித்து பிரபாஸ், அனுஷ்கா தரப்பில் இருந்து இதுவரை எந்த விதமான விளக்கமும் வரவில்லை.


இதைபற்றியெல்லாம் கொஞ்சம் கூடக் கவலைகொள்ளாத நடிகை அனுஷ்கா தற்போது தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் DP-ஆக மிரட்டலான போட்டோவை ஷேர் செய்து வைத்துள்ளார். அதாவது அனுஷ்கா அருந்ததி லுக்கில் இருக்கும் போட்டோவைத்தான் அதில் விட்டிருக்கின்றார்.


இவ்வாறாக அருந்ததி லுக்கில் இருக்கும் போட்டோவை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் DP-ஆக வைத்துள்ளது ஏன் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் கிளம்பியிருக்கின்றது.

இதனால் "இந்த போட்டோ திருமண வதந்திகளுக்கான மிரட்டலா அல்லது மணமகள் தோற்றமா" என்று கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement