• May 18 2024

எல்லாமே விஜய் டிவி போட்ட மாஸ்டர் பிளான்! விசித்ரா சொன்னதும் பொய் தான்! புதுசா சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றிய போட்டியாளர்களுள் விசித்ராவும் ஒருவராக காணப்படுகிறார். தற்போது இவர் விளையாடும் முறை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அத்தோடு சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்குமளவுக்கு இவர் விளையாடி வரும் ஸ்ராட்டஜியும் நன்றாக உள்ளது.

தமிழ் திரையுலகில் பொற்கொடி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை விசித்ரா. இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து  சின்னத்தாயி, தேவர் மகன், தலைவாசல், எங்க முதலாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக 90ஸ் கிட்ஸ் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். 

100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சீரியல்களிலும் நடித்திருக்கின்றார். அத்தோடு குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபல்யமானார். இவர் தற்பொழுது பிக்பாஸ சீசன் 7 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார்.


இந்த நிலையில், தனது சினிமா வாழ்க்கையில் இடம்பெற்ற கசப்பான அனுபவத்தை பிக் பாஸ் வீட்டில் பகிர்ந்துள்ளார். அது தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி உள்ளது.

இவ்வாறான நிலையில், நடிகை விசித்ரா பிக் பாஸ் வீட்டில் சொன்னது எல்லாம் பொய் என்று பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

'2000ம் ஆண்டு நடந்த விஷயத்தை நடிகை விசித்ரா இப்போ பிக் பாஸ் வீட்டில் வைத்து பேசுவதற்கு என்ன காரணம், மன்சூர் அலிகான் விவகாரம் பெரியதாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு விஷயத்தை விஜய் டிவி பிளான் போட்டு செய்து இருக்கிறது. 


குடித்து விட்டு இரவில் வந்து கதவை தட்டுவார், நான் ரூம் ரூமா மாறினேன், அதற்கு உதவியது அப்போது மேனேஜராக இருந்த கணவர் என்று இப்போது சொல்லும் விசித்ரா அப்போது காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கலாமே, இப்போது இந்த விஷயத்தை சொல்ல காரணம், பிக் பாஸை யாரும் பார்ப்பதில்லை, அதற்காக விஜய் டிவி செய்த வேலை இது.  மேலும், திருமணமாகி 3 குழந்தைகளை பெற்றுக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வரும் விசித்ரா, இந்த நேரத்தில் இப்படியொரு புகாரை முன்வைக்க என்ன காரணம், மேலும், பெரிய நடிகர் என்று சொன்னால் போதுமா யார் என்று சொல்ல தைரியம் இல்லாதவர் ஏன் அதை இப்போது சொல்கிறார். அவர் சொல்வது எல்லாமே பொய், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓட்டுவாங்குவதற்காக இப்போது இந்த விஷயத்தை பேசி இருக்கிறார்' என்று பயில்வான் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement