• Oct 16 2024

விஜயா வீட்டில் வாசுதேவனால் வெடித்த பூகம்பம்.. வசமாக சிக்கிய மீனா? அண்ணாமலை வார்னிங்

Aathira / 6 days ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்துவை போலீசார் விட மறுக்க, மீனா ஸ்ருதிக்கு போன் பண்ணி ஹெல்ப் கேட்கின்றார். அவர் தனது அம்மாவிடம் கேட்க, அவர் வாசுதேவனிடம் சொல்லுகின்றார். ஆனால் வாசுதேவன் இதை வைத்து அண்ணாமலையின் குடும்பத்தை பிரிக்க பார்க்கின்றார். அதன்படி சுதாவை இந்த பிரச்சினையை விஜயா வீட்டில் சொல்லி குழப்புமாறு அனுப்பி வைக்கின்றார்.

இதைத்தொடர்ந்து முத்து மீனாவை வீட்டுக்குப் போகுமாறு அனுப்பி வைக்கின்றார். மேலும் தான் சவாரிக்கு சென்றதாக சொல்ல சொல்லுகின்றார். மீனாவும் வீட்டுக்கு போகும்போது விஜயா அவரை தடுத்து நிறுத்தி எங்க போன என்று கேட்கின்றார். அதற்கு அவர் தான் பூமாலை கட்ட போனதாகவும் முத்து சவாரிக்கு போனதாகவும் சொல்லுகின்றார்.


ஆனால் அங்கு ஏற்கனவே ஸ்ருதியின் அம்மா உண்மையை சொல்லி விட்டதால் அண்ணாமலை ஏன் இப்படி பண்ணுனீங்க என்று கேட்கின்றார். மேலும் முத்து தான் ஜோசிக்காமல் செய்வார் நீ யோசித்து தானே செய்வாய் இப்படி செய்வது தப்பு என்று முதன்முறையாக மீனாவுக்கு அட்வைஸ் பண்ணி விட்டு செல்கின்றார். இதனால் விஜயா சந்தோஷப்படுகிறார்.

மறுநாள் போலீஸ் ஸ்டேஷனில் முத்து எந்த தப்பும் செய்யவில்லை என்று மீனா சொல்ல, போலீஸ் அவரை விட்டு விடுகின்றது. அதன் பின்பு சத்யா முத்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்கின்றார். ஆனாலும் அவரை நன்றாக படிக்குமாறு சொல்லி முத்து அனுப்பி வைக்கின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement