• May 07 2024

இனிமேல் யாரும் உதவி செய்ய வேண்டாம்- முரட்டுத்தனமான உடம்புடன் நிற்கும் ராகவா லாரன்ஸ்- கடும் குழப்பத்தில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் வின் டீசல் போல முரட்டுத் தனமான உடம்புடன் அதிரடியாக தனது தோற்றத்தை சந்திரமுகி 2 படத்துக்காக மாற்றி உள்ளேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் அதன் புகைப்படங்களை தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வலம் வருபவர் தான் பி. வாசு இயக்கத்தில் இவரது இயக்கத்தில் ரஜினி, பிரபு ,வடிவேலு, நயன்தாரா, ஜோதிகா எனப் பல பிரபலங்கள் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி.


இப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வருகின்றது. இப்படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகின்றார். வடிவேலு ராதிகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பும் அண்மையில் தான் ஆரம்பமாகியது.

இந்த நிலையில் இப்படத்திற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது உடம்பை முரட்டுத்தனமாக மாற்றியுள்ளார்.இதனை தனடு டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதோடு தன்னுடைய அறக்கட்டளைக்கு இனி யாரும் டொனேஷன் கொடுக்க வேண்டாம் என்கிற கோரிக்கையும் திடீரென வைத்துள்ளார்.


இதுவரை ராகவா லாரன்ஸ் மாஸ்டர் சிக்ஸ் பேக் போல உடம்பை வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து எந்த படத்திலும் நடித்தது கிடையாது. ஆனால், முதல் முறையாக இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்துக்காக இப்படியொரு டிரான்ஸ்ஃபர்மேஷன் செய்து வருவதை அறிவித்துள்ளார். அதற்கு காரணமான சிவா மாஸ்டருக்கும் நன்றி கூறியுள்ளார்.

மேலும் இவர் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஏகப்பட்ட நல உதவிகளை செய்து வருகிறார். அவர்களை பாதுகாத்து வளர்ப்பது, படிக்க வைப்பது போன்ற சேவைகளை தனது லாரன்ஸ் அறக்கட்டளை சார்பாக செய்து வருகிறார். ஏகப்பட்ட குழந்தைகளை பெரிய ஆளாக்கி சமூகத்தில் நடமாட வைத்து வருகிறார்.


இந்நிலையில், இனிமேல் தனது அறக்கட்டளைக்கு யாரும் டொனேஷன் பணம் அனுப்ப வேண்டாம் என அதிரடியாக ட்வீட் போட்டுள்ளதால் இறைவன் அருளால் தான் தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்து வருவதாகவும், தனது சொந்த செலவிலேயே தனது பிள்ளைகளை பாதுகாக்க போவதாகவும் அறிவித்துள்ளார்.

இவரின் இந்த திடீர் முடிவு அவரது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தினாலும், சொந்த பணத்தில் நல்லது செய்ய நினைப்பது சூப்பரான விஷயம் அண்ணா என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement