• May 19 2024

பிக்பாஸ் வீட்டை விட்டு மூன்றாவதாக வெளியேறப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் தற்போது ஆறாவது சீசனை எட்டி உள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9-ந் தேதி தொடங்கப்பட்டது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதல் வார இறுதியில் 21-வது போட்டியாளராக மைனா நந்தினி எண்ட்ரி கொடுத்தார்.

இதனால் இரண்டாவது வாரத்தில் இருந்து பல்வேறு சண்டைகள் மற்றும் சர்ச்சைகள் என விறுவிறுப்பாக சென்றது பிக்பாஸ் நிகழ்ச்சி. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் முதல் வாரத்திலேயே பேமஸ் ஆனதற்கு காரணம் ஜ.பி முத்து தான். இவர் தனது பிள்ளைகளுக்காக முதலில் வீட்டை விட்டு வெளியேறினார்.


அதனைத் தொடர்ந்து சாந்தி மாஸ்டர் இரண்டாவதாக எலிமினேட் ஆகி வெளியேறினார். இந்த நிலையில் இன்று காலை ரச்சிதாவும் ஜனனியும் இருந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ரச்சிதா ஜனனியிடம் பெரும்பாலும் இந்த வாரம் அசல் தான் வெளியேறுவார் என்று நினைக்கிறேன் எனக் கூறியிருந்தார். அதே போல ஜனனி தான் நிவாஷினி அல்லது செரின் வெளியேறுவார் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். இவர்கள் மூவரும் சரியான கன்டென்ட் கொடுக்காமல் இருக்கின்றார்கள் என்ற கருத்தையும் முன்வைத்தனர்.


எனவே இந்த வாரம் இவர்கள் கணித்த படி நடக்குமா அல்லது மக்கள் தீர்ப்பு வேறாக இருக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம் என நெட்டிசன்கள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement