நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்து 4 மாதங்கள் ஆகும் நிலையில் தீடீரென அனைவருக்கும் சர்ப்ரைஸ் ஷாக் கொடுக்கும் விதமாக தங்களுடைய ட்வின்ஸ் குழந்தைகளின் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.
பின்னர் அவர்கள் இருவரும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றது அதன் பின் தான் தெரியவந்தது.
திருமணம் ஆகி 5 வருடங்கள் குழந்தை இல்லாதவர்கள் தான் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற முடியும் என சட்டம் இருக்கும்போது இவர்கள் எப்படி 4 மாதங்களில் பெற்றார்கள் என சர்ச்சை வெடித்தது. அது பற்றி விளக்கம் கேட்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சரும் கூறி இருந்தார்.
இவ்வாறுஇருக்கையில் அந்த இரட்டை குழந்தைகளுக்கு வாடகைத்தாயாக இருந்தது யார் என்கிற விவரம் தற்போது கசிந்திருக்கிறது.
கேரளாவில் நயன்தாராவின் உறவினர் ஒருவர் தான் வாடகைத்தாயாக இருந்திருக்கிறார் என சொல்லப்படுகின்றது. திருமணத்திற்கு முன்பே இந்த விஷயம் பற்றி முடிவெடுத்து குடும்பத்தினரிடம் ஒப்புதல் பெற்று தான் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று இருக்கிறார் நயன்தாரா
Listen News!