பாலிவூட் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் ஷாருகான். இவர் தற்பொழுது இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருவதோடு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். அண்மையில் சென்னையில் ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்றது.இதனை அடுத்து சென்னையிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனது ரசிகர்கள் 20 பேரை அழைத்து சந்தித்திருக்கின்றார் ஷாருகான்.
அத்தோடு அவர்களுக்கு இரவு உணவினை வழங்கி அவர்களுடன் தனித்தனியாக நேரம் செலவிட்டு போட்டோக்களையும் எடுத்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே வைரலாக பேசப்பட்டு வருவதையும் காணலாம்.
மேலும் பொதுவாக ஷாருகான் தனது நண்பர்களுடன் நேரத்தை செலவழித்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!