• Sep 21 2024

கதாநாயகி ஷோவின் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?- கொடுக்கப்பட்ட பணத்தொகையின் பெறுமதி எவ்வளவு தெரியுமா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்ற பல பிரபலங்கள் சினிமாவில் மின்னிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் சிவகார்த்திகேயன், நடிகர் சந்தானம், கே பி ஒய் பாலா, தீனா, புகழ், மதுரை முத்து, ராமர் என பலருடைய பெயரை சொல்லிக் கொண்டே போகலாம்.

 அந்த வரிசையில் இப்போது பெண் கதாநாயகிகளை சின்னத்திரையில் அறிமுகப்படுத்தும் வகையில் கதாநாயகி என்ற நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டது.


அதில் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்தில் இருந்த பல பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் ஒரு சிலர் மட்டும்தான் தேர்வாகி இருந்தனர். அவர்களில் 8 முன்னணி போட்டியாளர்கள் கதாநாயகி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு அடுத்தடுத்த டாஸ்க் கொடுக்கப்பட்டது.


ஒவ்வொரு வாரமும் தமக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளை சிறப்பாக விளையாடி இறுதி வாரத்தில் டைட்டில் வின்னராக இரட்டை சகோதரிகளான ருபீனா மற்றும் ருபிசீனா ஆகியோர் தெரிவாகியுள்ளதோடு அவர்களுக்கு 10 லட்சம் பெறுமதியான பணத்தொகையும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement