விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே இணையத்தில் கசிந்தது குறித்து இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அளித்த பேட்டி தற்போது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அந்த பேட்டியில் அவர் தனது அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, 2010ஆம் ஆண்டு சரத்குமார் நடித்த ‘ஜக்குபாய்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதன் முழுக் காட்சிகளும் இணையத்தில் வெளியானது என அவர் நினைவுகூர்ந்தார்.

இந்த சம்பவம் தனது வாழ்க்கையில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியதாகவும், ஒரு படைப்பாளியாக அது மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியதாகவும் அவர் கூறினார். அந்த நேரத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் ஆதரவாக முன்வந்து இந்த பிரச்சினைக்கு எதிராக குரல் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், படம் கசிந்ததால் அதன் கதை அமைப்பை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. காட்சிகளை முன் பின்னாக மாற்றி புதிய வடிவில் வெளியிட்டாலும், படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்று அவர் வருத்தத்துடன் பகிர்ந்தார்.
இணையக் கசிவுகள் திரைப்பட துறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளதை இந்த அனுபவம் வெளிப்படுத்துகிறது. கே.எஸ். ரவிக்குமார் கூறிய இந்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினரிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!