• May 12 2024

ஐஸ்வர்யாவின் போஸ்டரை பார்த்ததும் அவரது கணவர் அபிஷேக் என்ன பண்ணிருக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரமாண்ட இயக்குநர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், த்ரிஷா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் பல மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டது. செப்டம்பர் 30 ல் பெரிய திரைகளில் பொற்காலம் திரும்பி வருகிறது என்ற வாசகத்துடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

மேலும் படத்தின் புரமோஷனுக்காக படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்தவர்களின் போஸ்டர்கள், அவர்களின் கேரக்டர் பெயருடன் படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி ஆதித்ய கரிகாலனாக நடிக்கும் விக்ரம், வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி ஆகியோரின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.

இதைத் தொடர்ந்து நேற்று நந்தினி ரோலில் நடிக்கும் ஐஸ்வர்யா ராயின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அழகி முகத்துடன் பழிவாங்க காத்திருக்கும் இவர் தான் நந்தினி. இந்த போஸ்டரை ஐஸ்வர்யா ராய் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.இதனை பார்த்த ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன், ரெட் கலரில் இருக்கும் பெரிய ஹார்ட் எமோஜி ஒன்றை கமெண்ட் பகுதியில் பதிவிட்டுள்ளார்.

அபிஷேக் செய்த இந்த செயலை சந்தோஷமாக ஐஸ்வர்யா ராயும் பகிர்ந்துள்ளார்.ஆனால் பொன்னியின் செல்வனின் நாவல் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில், நந்தினி கேரக்டருக்கு ஐஸ்வர்யா ராய் செட் ஆவாரா என சந்தேகம் கிளப்பி உள்ளனர். ஏனென்றால் நந்தினி கேரக்டர், வில்லி கேரக்டர். அது இவருக்கு சரி வருமா அல்லது செயற்கை தனமாக இருக்குமா என கேட்டு வருகின்றனர். அதே சமயம், நந்தினி நாட்டிலேயே சிறந்த பேரழகி. அழகான முகத்துடன் வில்லத்தனம் செய்பவர். அதனால் ஐஸ்வர்யா ராய் தான் இந்த ரோலுக்கு சரி என கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement