• Sep 20 2024

சூர்யா- பாலாவின் படத்திற்கு வைக்கப்பட்ட தெலுங்கு தலைப்பு என்ன தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருகின்றார் நடிகர் சூர்யா.

இவர் நடிப்பில் அண்மை காலங்களில் வெளியாகிய சூரரை போற்று, ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் பெரும் வெற்றியை குவித்து வருகின்றது.

இந்நிலையில் நடிகர் சூர்யா 15 ஆண்டுகளுக்குப் பின்பு இயக்குநர் பாலாவுடன் இணைந்துள்ளார். ஆரம்பகாலங்களில் இயக்குநர் பாலா சூர்யாவை வைத்து ‘பிதாமகன்’, ‘நந்தா’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் எழுந்து, சூர்யா அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது உண்மையில்லை என்று தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்தது.

இந்நிலையில் நேற்று இயக்குநர் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் மற்றும் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது.

அத்தோடு தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இந்த திரைப்படம் உருவாகி வரும் நிலையில் தமிழில் ‘வணங்கான்’ என்றும் தெலுங்கில் அதே பொருளில் வரும் ‘அச்சாலுடு’ என்றும் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement