தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான புராணக் கதைகளுக்கு தனி அடையாளத்தைக் கொடுக்கும் இயக்குநர் சுந்தர.C, தற்போது மிகுந்த எதிர்பார்ப்புடன் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை இயக்கி வருகின்றார். முதல் பாகமான 'மூக்குத்தி அம்மன்' ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. அதனால், இதன் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
சுந்தர.C இயக்கும் இப்படம் முதலில் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் தற்பொழுது படத்தின் வேலைகள் மற்றும் பிரம்மாண்டக் காட்சிகள் காரணமாக பட்ஜெட் 120 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இயக்குநர் சுந்தர.C இதற்கு முன்னர் பிரமாண்டமான படங்களை இயக்கிய அனுபவம் பெற்றவர். எனினும் , இந்தப் படம் அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முதல் திரைப்படம் என்பதால், அவருக்கு புதிய அனுபவமாக உள்ளது.
சுந்தர.C இதைப் பற்றி கூறும்போது "இந்தப் படம் என்னுடைய திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமையும். ரசிகர்கள் இதை ஒரு புதிய அனுபவமாக ரசிப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார். முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதால், இரண்டாம் பாகம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். அத்துடன் பிரம்மாண்டமான திரைக்கதையுடன் சுந்தர.C இந்தப் படத்தை உருவாக்குவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!