பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது 6 ஆவது சீசன் இடம்பெற்று வருகின்றது. இந்நிகழ்வானது 2 வாரங்களை தாண்ட உள்ள நிலையில் வீட்டில் போட்டியாளர்கள் ஜாலியாகவும், சண்டை போட்டும் தங்களுடைய சுவாரஸ்யத்தை கூட்டி வருகின்றனர்.
மேலும் மொத்தமாக உள்ள 21 போட்டியாளர்களில் அசீம், ராம் ராமசாமி, தனலட்சுமி, ரச்சிதா, சாந்தி, குயின்ஸி, விக்ரமன், மகேஸ்வரி, ஆயிஷா, நிவாஷினி, சிவின் கணேஷ் மற்றும் ஷெரினா ஆகிய 12 பேர் பெயர்கள் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் யார் இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார்? எதனால் வெளியேறுவார்? என்பது பற்றி அலசி ஆராய்ந்து கருத்துக் கணிப்பு ஒன்றினை முன்வைத்துள்ளார்கள் பிக்பாஸ் ரசிகர்கள்.
அதில் அசீம் முதலில் அதிக வாக்குகளுடன் இருந்து வந்த நிலையில் தற்போது "பேச ஆரம்பித்தா காது ஜவ்வு கிழியுதுன்னு" ரசிகர்கள் அவருக்கான ஓட்டுக்களை குறைத்து ரச்சிதாவுக்கு அதிகம் போட ஆரம்பித்து அவரை இந்த பட்டியலில் முதலிடத்திற்கு கொண்டு வந்து விட்டனர். கமல்ஹாசன் ஃபர்ஸ்ட் சேவ் ரச்சிதா என்று சொன்னால் போதும் ரொம்பவே அவர் சந்தோஷப்படுவார் எனவும் கூறி வருகின்றனர்.
மேலும் ஆரம்பத்தில் அமைதியாக இருந்த அரசியல்வாதி விக்ரமன் பஸர் அடித்தே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாகி விட்டார். ரச்சிதாவை தொடர்ந்து 2ஆவதாக விக்ரமன் அதிக வாக்குகளுடன் சேவ் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஆடிய மாரி டான்ஸ் வேறலெவல் வெறித்தனமாக இருந்தது. டைட்டில் வின்னர் ஆரியின் ஆதரவும் விக்ரமனுக்கு அதிகமாகவே கிடைத்து வருகிறது
இருப்பினும் விக்ரமனை தொடர்ந்து அதிக ஓட்டுக்களுடன் அசீம் உள்ளாராம். கடைசி இடத்தில் இருந்த குயின்ஸிக்கு திடீரென இளைஞர்களின் ஆதரவு கிடைக்க அவரும் மேலே வந்து விட்டார். ஆயிஷா, நிவாஷினி, தனலட்சுமி, ராம் ராமசாமி உள்ளிட்டோர் ரொம்பவே சேஃப் ஆன இடத்தில் உள்ளனர்.
அதுமட்டுமல்லாது ஷெரினா, ஷிவின், விஜே மகேஸ்வரி மற்றும் சாந்தி ரொம்பவே குறைவான ஓட்டுக்களுடன் டேஞ்சர் ஜோனில் உள்ளனர். திருநங்கை போட்டியாளர் ஷிவினின் கதைக்கு பின்னர் கூட அவருக்கான ஆதரவு பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக ஒன்றும் பெருகவில்லை என்றே தெரிகிறது. அத்தோடு முன்னிலையில் இருந்த விஜே மகேஸ்வரி எல்லாம் டக்கென கடைசிக்கு வந்து விட்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 இல் கொஞ்சம் வயதானவர் என்றால் அது நம்ம டான்ஸ் மாஸ்டர் சாந்தி தான். உப்புமா செய்து போட்டே பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானாலும், யாரும் அவருக்கு ஓட்டுப் போட்டு காப்பாற்றும் எண்ணத்திலேயே இல்லை என்பது தொடர்ந்து அவர் கடைசி இடத்தில் குறைவான ஓட்டுக்களுடன் இருப்பதன் மூலம் தெட்டத் தெளிவாக காட்டுகிறது.
மேலும் வயதான போட்டியாளர் என்கிற ரீதியிலும் வைத்து பார்த்தால் முதலில் வெளியேறுபவர் அவராகத்தான் இருப்பார் என்பது ரசிகர்கள் மத்தியில் கன்ஃபார்ம் ஆகி உள்ளது.
அந்தவகையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைக்கான ஷூட்டிங் நாளை காலை ஆரம்பமாகும், நாளை மாலைக்குள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர் யார் என்பது உறுதியாகவே லீக் ஆகிவிடும்.
அத்தோடு ஜிபி முத்து, தனலட்சுமி உள்ளிட்டோரும் தொடர்ந்து வீட்டுக்குப் போக வேண்டும் என அடம்பிடித்து வரும் நிலையில், இந்த வாரமே டபுள் எவிக்ஷன் பண்ணி அனுப்பி விடுங்க என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பிக்பாஸ் ரசிகர்கள் கூறியது போன்று உண்மையிலும் சாந்தி தான் வெளியே போறாங்களா அல்லது ஆசைப்பட்டது போன்று ஜிபி முத்து, தனலட்சுமி இவர்களில் யாராவது தான் போறாங்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!