• May 06 2024

நிவாஷினி சொன்னதெல்லாம் கட்டுக்கதை எனக்கு எல்லாமே தெரியும்- புது புரளியைக் கிளப்பி விட்ட வனிதா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் பிக் பாஸ் ஆகி 6 நிகழ்ச்சி தொடங்கி 12 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக வருகிறது.  21 போட்டியாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.

 இரண்டாம் வாரத்திற்கான டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். இதற்கு கதை சொல்லும் நேரம் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த டாஸ்க் நாமினேஷனுக்கு உட்பட்டதாகும். இதனால் ஒவ்வொரு போட்டியாாளர்களும் தமது கதையை கூறி இருந்தனர்.


அப்போது நிவாஷினியும் தனது கதையைக் கூறினார்.அதில் அவர், எங்கள் வீட்டில் என்னை மிகவும் செல்லமாக வளர்த்தார்கள். நான் தான் கடைசி பிள்ளை. பள்ளிக்கூடம் போகும்போது தான் என்னுடைய சோதனை காலம் தொடங்கியது. தான் கழுத்தில் இருந்து உடம்பு பாதி வரை தழும்புகள் இருக்கும். அதை பார்த்து பலரும் என்னை கிண்டல் கேலி செய்வார்கள். இதனால் நான் மன உளைச்சல் அடைந்திருக்கிறேன். அது மட்டும் இல்லாமல் சில சமயம் அந்த தழும்புகளை எல்லாம் கத்தியில் கீறி இருக்கிறேன். என்னையே நானே வெறுத்தேன். அப்போது என்னுடைய அம்மா ஆயில் கம்பெனியில் வேலை செய்து இருந்தார்.

பொருளாதார ரீதியாக குடும்பம் கொஞ்சம் கஷ்டத்தில் இருந்தது என்று சொல்லி இருந்தார். இப்படி இவர் கதை சொல்லியதற்கு யாருமே பஸர் அடிக்கவில்லை. இதனால் நிவாஸினி நாமினேஷனில் பஸர் தப்பித்து இருந்தார். இந்நிலையில் நிவாஸினி பேசியதற்கு வனிதா அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, நிவாஷினி பேசினது கொஞ்சம் ஓவரா கட்டுக்கதை மாதிரி தான் இருக்கிறது. ஒருத்தரை பற்றி பேசக்கூடாது இருந்தாலும் உண்மையை சொல்ல வேண்டும். எனக்கு சிங்கப்பூரில் உறவினர்கள் இருக்கிறார்கள். அங்க எல்லாம் பாடி ஷேமிங், ஒருவரை உருவ கேலி செய்வதெல்லாம் மிகப்பெரிய குற்றம். தண்டனை கொடுப்பார்கள்.


இப்படி இருக்கும்போது இந்த பெண்ணை எப்படி செய்திருப்பார்கள்? அது மட்டும் இல்லாமல் பள்ளிப் பருவத்தில் பள்ளி ஆடை அணிந்து செல்லும்போது எப்படி இவருடைய தழும்பு தெரியும்? செல்லும்போது தெரிந்தாலும் சின்ன தழும்பு மாறி தான் தெரியும். அதை ஒரு சில பேர் பார்த்து சொல்லியிருப்பார்கள். பெரிய அளவில் கிண்டல் கேலி செய்யும் அளவிற்கு ஒன்றும் இருந்திருக்காது. அது மட்டும் இல்லாமல் அவங்க அம்மா ஆயில் கம்பெனியில் வேலை செய்திருக்கிறார் என்று சொன்னார். எனக்கு அந்த கம்பெனியை நன்றாக தெரியும். அதில் நன்றாக வருமானம் வரும். இவர் சிம்பதிக்காக கொஞ்சம் அதிகமாகவே கதை கட்டியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement