தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் மனதை தொட்ட கதாப்பாத்திரங்களை உருவாக்கிய நடிகர் ராஜேஷ், சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மரணம் திரையுலகத்தையும் ரசிகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய இறுதிக் கிரியை இன்று சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தந்தையாகவும், ஆசானாகவும் நடித்த இவர், சினிமா உலகில் பல தலைமுறைகளால் மதிக்கப்பட்டவர். பல சீரியல்களில் நடித்திருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகர் ராஜேஷின் மகளான திவ்யா ராஜேஷ், தந்தையின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தந்தையின் மறைவுவிற்குப் பிறகு வெளியான தனது உருக்கமான காணொளியில், “எனக்கு டிக்கெட் கிடைச்சிருச்சு… சனிக்கிழமை காலையில இந்தியா வந்துருவேன். நானும் அப்பாவும் தினமும் பேசுவோம்… கடைசியா போனில் பேசினப்போ நல்லா இருக்கேன் என்று தான் சொன்னார்…” என கண்ணீருடன் பகிர்ந்திருந்தார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. தனக்குள் எவ்வளவு அழுத்தமான மன வேதனை இருக்கிறது என்பதையும், தந்தையின் நினைவுகள் எப்படி கவலைப்படுத்தியது என்பதையும் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.
திவ்யா இன்று காலை சென்னை வந்ததையடுத்து, ராஜேஷின் உடல் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பிற்பகல் 3 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது.
நடிகர் ராஜேஷின் மறைவினால், தமிழ் சினிமா ஒரு தரமான கலைஞரை இழந்துள்ளது. அவரின் பங்களிப்புக்கள், தரமான நடிப்புகள், யதார்த்தமான கதாப்பாத்திரங்களால், இன்றைய தலைமுறை கூட அவரை நினைத்துக் கவலை கொள்கின்றார்கள்.
Listen News!