• May 06 2024

செல்லம்மா சீரியல் கதாநாயகியுடன் தொடர்பில் இருக்கும் அர்னவ்- கணவனின் ரகசியத் தொடர்பை அம்பலமாக்கிய திவ்யா ஸ்ரீ.

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் கடந்த 2017ம் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் காதல்களாகி திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் தான் அர்னவ் மற்றும் திவ்ய ஸ்ரீ. இதில் தற்பொழுது அர்னவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா சீரியலிலும் திவ்யாஸ்ரீ மகராசி சீரியலிலும் நடித்து வருகின்றார்கள்.

அண்மையில் கூட திவ்யா ஸ்ரீ தமது திருமண புகைப்படங்களையும் தான் கர்ப்பமாகி இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் திவ்யா இன்றைய தினம் அர்னவ் தன்னுடைய கர்ப்பத்தை களைப்பதற்காக தன்னுடைய வயிற்றில் அடித்ததாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அழுது கொண்டே வீடியோ போட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பேட்டி கொடுத்த அர்னவ் தான் அடிக்கவில்லை என்றும் திவ்யாவுக்கு ஈஸ்வரன் என்பவரோடு தொடர்பிருப்பதாகவும் பேட்டியளித்திருந்தார். இதனால் யார் சொல்வது சரி என்று தெரியாமல் ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் இருந்தனர்.


இந்த நிலையில் மீண்டும் திவ்யா பேட்டி கொடுத்துள்ளார். அதில் பேசும் போது அர்னவ் செல்லம்மா சீரியல் கதாநாயகி அன்சிதாவுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும் அதனை நிறைய பெர் தன்னிடம் கூறியதாகவும் இருவரும் ஒரே அப்பாட்மெண்டில் கணவன் மனைவி என்று சொல்லி வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து கூறிய அவர் தனது திருமணம் இந்து மற்றும் முஸ்லீம் முறைப்படி நடந்ததாகவும் கூறினார். அத்தோடு அர்னவ் அஞ்சிதாவை திருமணம் செய்து கொள்வதற்காகவே தனது குழந்தையை அழிக்கப் பார்க்கிறார். என்னுடைய நம்பர் எல்லாத்தையும் பிளக் பண்ணி வச்சிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.


அத்தோடு அர்னவ் செய்யிற தப்பெல்லாம் யார் எடுத்து சொல்லுறாங்களோ அவங்கள அவனுக்கு பிடிக்காமல் போகுது என்றும் தன்னிடம் தனது கணவர் பேசிய அனைத்து ஆதாரங்களும் இருப்பதாகவும் தெரிவித்தார். இவரின் இந்த செய்தியாளர் சந்திப்பு வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement