• May 04 2024

கணவரை பிரிந்துவிட்டாரா…. ரசிகர்களின் கேள்விக்கு உண்மையை உடைத்த பிரியங்கா..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வருபவர் வி.ஜே பிரியங்கா.

இவருடைய நகைச்சுவையான பேச்சும், எந்தச் சூழ்நிலையையும் அழகாக கையாளும் விதமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இதனாலேயே இவர் குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டார்.

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் ஆகிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வந்ததோடு பிக்போஸ் சீசன்-5 இல் போட்டியாளராகவும் களமிறங்கியிருந்தார்.

இந்நிலையில் திருமணமாகியிருந்தபோதும், பிக்போஸ் வீட்டில் பிரியங்கா தன் கணவர் பற்றிப் பேசவே இல்லை, ப்ரீஸ் டாஸ்க்கில் கூட அவரது கணவர் வரவில்லை.

இதனால் பிரியங்கா அவரது கணவனைப் பிரிந்து விட்டதாக பலரும் புரளி கூறியிருந்தனர்.

இதனையடுத்து சமீபத்தில் ரசிகர் ஒருவர் "திருமணமான பிறகும் எப்பிடி எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றீர்கள்" எனப் பிரியங்காவிடம் கேட்டுள்ளார்.

அதற்கு பிரியங்கா "உங்களைப் புரிந்து கொள்ளும் கணவர் இருந்தால், அவருக்கு நீங்கள் விசுவாசமாக இருந்தால் எல்லாம் சாத்தியமாகும்" என்று பதிலளித்துள்ளார்.

பிரியங்காவின் இப்பதிலைக் கேட்ட ரசிகர்கள் பிரியங்கா அவரது கணவரை விவாகரத்து செய்து விட்டாரா? என்ற குழப்ப நிலையில் உள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement