• Apr 27 2024

இயக்குநர் செல்வராகவன் வீட்டில் நடைபெற்ற துயர சம்பவம்- இரங்கல் தகவலைப் பதிவிட்ட அவரது மனைவி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். நடிகர் தனுஷின் அண்ணனான இவர் நடிகை சோனியா அகர்வாலை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து பின்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவரை விவாகரத்து செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த கீதாஞ்சலி இரண்டாவது திருமணம் செய்தார்.இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.மேலும் தற்பொழுது இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் களமிறங்கியுள்ளார்.

அந்த வகையில் பீஸ்ட் மற்றும் சாணிக்காயிதம் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் செல்வராகவன் குடும்பத்தில் ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது அவரது மனைவி கீதாஞ்சலியின் கொள்ளு பாட்டி மரணமடைந்துள்ளார்.

கீதாஞ்சலியின் கொள்ளு பாட்டியான அலமேலு பத்மநாபன், கடந்த 19ஆம் தேதி காலமானார். இதனை தனது சோஷியர் மீடியா பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார் கீதாஞ்சலி. இதுகுறித்து கீதாஞ்சலி ஷேர் செய்துள்ள பதிவில், "அவர் ஒரு முழுமையான ராக்ஸ்டார்! வார்த்தையின் ஒவ்வொரு அர்த்தத்திலும் ஒரு இரும்புப் பெண்மணி. 923 இல் பிறந்த ஒரு பெண்ணுக்கு, அவரது எண்ணங்கள் சில சமயங்களில் மில்லினியல்களை விட முற்போக்கானவை.

அவருக்கு நீண்ட ஆயுள் இருந்தது. அவரது வாழ்க்கையில் நிறைய கெட்டது ஆனால் நிறைய நல்லதும் இருந்தது. நல்லவற்றில் கவனம் செலுத்தினார்! அவருடைய கொள்ளுப் பேரக் குழந்தைகளையும் (ரிஷி உட்பட) அனைவரையும் பார்த்தார். தான் நேசித்த அனைவரும் நலமாக இருப்பதை அறிந்து அவர் நிம்மதியாகச் சென்று விட்டார் என உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும் தனது கொள்ளுப்பாட்டியுடன் இருக்கும் போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement