• May 07 2024

கிழக்கு வாசல் சீரியல் குழுவினர் மீது கடும் கோபத்தில் இருக்கும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்- அடடே இது தான் காரணமா?

stella / 7 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் தான் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் சீரியல் மூலம் சின்னத்திரையிலும் அறிமுகமாகியுள்ளார். இந்த சீரியலை ராதிகாவின் ராடர்ன் நிறுவனம் தயாரித்து வருகின்றது.

இந்த தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஜீவா நாயகனாக நடிக்க பூவே பூச்சூடவா தொடரில் நடித்து பிரபலமான ரேஷ்மா நாயகியாக நடிக்கிறார். இதில்  எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


மேலும் தினேஷ், அருண், ஆனந்த் பாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் கிழக்கு வாசல் சீரியல் இரவு 10 மணிக்கு பதிலாக மாலை 4 மணிக்கு ஒளிப்பரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மாலை 4 மணிக்கு யார் பார்ப்பார், இப்படி நேரம் மாற்றியது சரியில்லை என இந்த சீரியல் நடிகர்கள் முக்கியமாக எஸ்.ஏ.சந்திரசேகர் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தொடரில் இருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறார் என்றும் கூறுகின்றனர், ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.அத்தோடு சீரியல் டிஆர்பியிலும் பின்னணியில் தான் நிற்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement