• Sep 21 2024

ரஜினி சொன்னதை கேட்காமல் கமலை நம்பிய இயக்குனர்.. நடுத்தெருவில் நிற்கும் பரிதாபம்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

ரஜினி சொன்ன அறிவுரையை கேட்காமல் கமல்ஹாசனை நம்பிய இயக்குனர் ஒருவர் தற்போது நடுத்தெருவில் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியது.

’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் வெற்றி காரணமாக இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கு வாய்ப்புகள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ரஜினியிடம் அவர் கதை ஒரு கதை சொல்ல, அந்த கதை மிக அபாரமாக இருந்ததாக ரஜினியும் அவரை பாராட்டினார். ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் பட்ஜெட் குறிப்பாக பிளாஷ்பேக் காட்சிகளின் பட்ஜெட் எல்லாம் சேர்த்து மேக்கிங் செலவு மட்டுமே 200 கோடி வரும் என்று கூறப்பட்டது.


இதனை அடுத்து ரஜினி இந்த படத்தில் இருந்து பின்வாங்கியதாகவும், மேக்கிங் செலவு ரூ. 200 கோடி மற்றும் நடிகர் நடிகர்களின் சம்பளம் எல்லாம் சேர்த்தால் 400 கோடி அளவுக்கு பட்ஜெட் வரும் என்றும் அதனால் இது சரியாக வராது, இந்த படத்தை கைவிட்டு விட்டு, சின்ன பட்ஜெட்டில் வேறொரு கதையை கொண்டு வாருங்கள்’ என்று அறிவுரை கூறினார்.

ஆனால் ரஜினி சொன்ன அறிவுரையை ஏற்காமல் கமல்ஹாசனிடம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி அந்த கதையை சொல்ல, அவர் இந்த படத்தை சிம்புவை வைத்து எடுக்கலாம் என்றும் நானே தயாரிக்கிறேன் என்று உத்தரவாதம் கொடுத்தார். இந்த படத்திற்காக சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தேசிங்கு பெரியசாமி மற்றும் சிம்பு செலவு செய்த நிலையில் தற்போது திடீரென கமல்ஹாசன் இந்த படத்தை தயாரிக்கவில்லை என்று கூறியதாக கூறப்பட்டது.

இதனை அடுத்து சிம்புவே இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவரும் பின்வாங்கி விட்டதாக கூறப்படுவதால், முதல் படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் கழித்தும் இன்னும் அடுத்த படத்தை இயக்க முடியாத அளவுக்கு நடுத்தெருவில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement

Advertisement