• May 18 2024

மறைந்த நடிகை சித்ராவின் கணவர் ஹேமந்த் பிரபல தொகுப்பாளினியை கர்ப்பமாக்கினாரா?- பகீர் தகவலை வெளியிட்ட ரேகா

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல சீரியல் நடிகையான வி. ஜே சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9 திகதி தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அத்தோடு இவரது மரணத்திற்கு இவரது கணவர் ஹேமந்த் தான் காரணம் என விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

ஆனால் சித்ராவுக்கும் ஹேமந்துக்கும் திருமணமே நடக்கவில்லை போலியான சான்றிதழ்களை கொடுத்து பதிவு செய்து விட்டார் என சித்ராவின் குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதே நேரத்தில் சித்ராவின் அந்தரங்க ரகசியங்கள் வெளியே தெரியாமல் இருக்க சித்ரா விருப்பம் இல்லாமல் அவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சித்ராவும் ஹேமந்தும் உண்மையிலேயே கணவன் மனைவிதானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் ஹேமந்த் பல பெண்களின் வாழ்க்கையை நாசப்படுத்தியுள்ளதாக சீரியல் நடிகை ரேகா நாயர் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ரேகா நாயர் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ஹேமந்துக்கு சித்ராவுடன் தொடர்பு ஏற்படுவதற்கு முன்பே பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறியுள்ளார்.

ஹேமந்தால் பல பெண்களின் வாழ்க்கை சீரழிந்துள்ளதாகவும், பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோவாகவும் போட்டோவாகவும் எடுத்து வைத்துக்கொள்ளும் பழக்கம் ஹேமந்துக்கு உண்டு என்றும் கூறியுள்ளார். மேலும் ஹேமந்துடன் நெருக்கமாக பழகிய பிரபல தொகுப்பாளினி ஒருவர், அவரால் கர்ப்பமானதாகவும் ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.

கர்ப்பமான செய்தியை கூறி திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த தொகுப்பாளினி கூறிய போது, தான் காரணமல்ல திருமணம் எல்லாம் செய்து கொள்ள முடியாது என ஹேமந்த் மிரட்டியதாகவும் சீரியல் நடிகை ரேகா நாயர் தெரிவித்துள்ளார். இதனால் தனது வயிற்றில் வளர்ந்த ஹேமந்தின் கருவை கலைத்த அந்த தொகுப்பாளினி தற்போது வரை ஏமாற்றப்பட்டதை நினைத்து கதறி வருவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் யார் அந்த தொகுப்பாளினி என்று குறிப்பிடவில்லை. இதனால் நெட்டிசன்கள் யார் அந்தத் தொகுப்பளினியாக இருக்கும் என கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement