• Apr 10 2025

தர்ஷிகாவுக்கு தலைக்கேறிய காதல் மோகம்.. நடுவீட்டில் ஆனந்தி போட்டு உடைத்த உண்மை

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள். ஆனாலும் அதிகளவானோ விஜய் டிவி பிரபலங்கள் தான் என்று தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டது. அது மட்டுமின்றி ஏனைய சீசன்களைப் போல அல்லாமல் இந்த சீசன் சுவாரஸ்யம் அற்றதாக காணப்படுகின்றது.

இந்த நிலையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ஒரு ஆணுக்கு இரண்டு பெண்கள் போட்டி என்பது போல ப்ரோமோ வெளிவிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் இந்த ப்ரோமோவை கழுவி ஊற்றி வருவதோடு போட்டியாளர்களையும் கழுவி ஊற்றி வருகின்றார்கள்.

d_i_a

அதில் தர்ஷிகாவுக்கும் பவித்ராவுக்கும் இடையே வாக்குவாதம் நிலவுகின்றது. இதனால் நான் என்ன பிரண்ட்ஷிப் உருவாக்கவா இங்க வந்திருக்கன் என்று தர்ஷிகா கேட்கின்றார். மேலும் இது வேஸ்ட் என்று பவித்ராவுக்கு சொன்னதோடு இங்க காமிக்கிற அன்பு, லவ்வோ என்ற கேமுக்கு தடையா வராது என்று சொல்லிச் செல்கின்றார்.


அதன் பின்பு ஆனந்தி பவித்ராவிடம் கடந்த சீசன்களில் நடந்தது போலவே ஒரு பையனுக்கு இரண்டு பொண்ணு போட்டி போடுறது போல இருக்குது என்று சொல்லுகின்றார். தற்போது இந்த ப்ரோமோரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது.

Advertisement

Advertisement