• May 03 2024

ஆயிஷா மற்றும் ஷெரினா போன்ற போட்டியாளர்களை கண்டிக்க வேண்டும்- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது மூன்று வாரங்கள் ஆகி விட்டது. இந்த நிகழ்ச்சியிலிருந்து ஜி.பி முத்து மற்றும் சாந்தி மாஸ்டர் ஆகியோர் வெளியேறிவிட்டனர். இருந்தாலும் நிகழ்ச்சி தொடர்ந்து சூடு பிடித்து ஓடிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிகழ்ச்சியில் பல விதிமுறைகள் இருக்கிறது.பிக் பாஸ் வீட்டில் வன்முறையில் ஈடுபடக்கூடாது, ஆபாசமாக பேசக்கூடாது, மைக்கை பாத்ரூம் செல்லும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கழட்ட கூடாது.


இப்படி பல விதி முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில் முக்கிய விதியாக இருந்து வருவது போட்டியாளர்கள் யாரும் தமிழைத் தவிர வேறு எந்த மொழிகளிலும் உரையாடக்கூடாது. தமிழ் ரசிகர்களுக்காக ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சியாகும் இதனால் போட்டியாளர்கள் பேசிக்கொள்ளும்போது பெரும்பாலும் தமிழில் தான் பேச வேண்டும் என்பதுதான் முக்கிய விதியாக இருந்து வருகிறது.

ஆனால், இந்த நிகழ்ச்சியில் தமிழ் பேசும் போட்டியாளர்களை தவிர பிற மொழி பேசும் போட்டியாளர்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அவர்களையும் மீறி ஆங்கிலத்திலையோ அல்லது இதனால் தாய் மொழிகளிலேயோ பேசுவது வழக்கமான ஒரு விஷயம் தான். அப்படி தொடர்ந்து பேசும்போது அவர்களை பிக் பாஸ் நிச்சயம் எச்சரிப்பார். அதேபோல பிற மொழி பேசும் போது தமிழ் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவார்கள்.


இந்த நிலையில் சமீபத்தில் ஆயிஷா மற்றும் ஷெரினா இருவரும் மலையாளத்தில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த உரையாடலில் மற்ற போட்டியாளர்கள் குறித்து அவர்கள் இருவரும் விவாதித்துக் கொண்டு குறித்து இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே தமிழில் பேச வேண்டும் என்று பிக் பாஸ் எச்சரித்து இருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர தமிழர்கள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இதுபோன்று பிற மொழிகள் பேசும் போட்டியாளர்களை ஏன் அனுமதிக்க வேண்டும். இதுபோன்று நடக்கும் போட்டியாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று நெட்சன்கள் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement