• May 02 2024

'சித்ரா ஹொட்டலுக்கு வரும் போதே உயிரோட வரவில்லை'-பிரபல சீரியல் நடிகையின் அதிரடியான பேச்சு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபல்யமானவர் தான் சித்ரா. இவர் பிரபல தொழிலதிபரான ஹேமந்த் என்பவரைக் காதலித்து நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார்.

இருப்பினும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்த இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்பு அனைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அத்தோடு இவரது இறப்பிற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

இந்த நிலையில் இவரது தோழியும் நடிகையுமான ரேகா. இது தற்கொலை இல்லை கொலை என்று பல்வேறு ஊடகங்களுக்கும் பேட்டியளித்து வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகள் பின்வருமாறு

மறைந்த சித்ராவுக்குக்கும் உங்களுக்கும் ரொம்ப நெருக்கமான உறவு இருக்கிறதே அது எப்படி என்று கேட்ட போது அவர் கூறியதாவது நாம் இருவரும் ஒரே கால கட்டத்தில தான் சினிமாவிற்குள் நுழைந்தோம். நிறைய இடங்களில் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்தோம். அதனால தான் நெருக்கம் என்று கூறினார்.

மேலும் சித்ரா வளர்ந்த அளவிற்கு நீங்க வளரவில்லையே அதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது நான் குறுக்கு வழியை விரும்பவில்லை நேர் வழியில் போகணும் என்று நினைக்கிறேன். அடி மட்ட கஷ்டத்திலிருந்து தான் இந்த ஒரு இடத்திற்கு வந்திட்டு இருக்கிறேன். நான் தோற்கவில்லை. இப்போ தான் படிப்படியாக முன்னேறிக்கிட்டு இருக்கின்றேன். சித்ரா போற வழி தப்பு என்று அவ கிட்ட சொல்லியிருக்கிறேன் அவ தான் அத கேட்டவே இல்லையே என்றார்.

அடுத்ததாக சித்ராவில் கொலையில் உங்கள் பங்களிப்பு என்ன என்று கேட்டபோது நான் ஒன்றும் பண்ணலயே அவளுக்கு ஒரு பிரச்சினை வரும் போது சொல்லியிருக்கிறேன். இந்த உலகம் இப்படி தான் நீ சரியா நட என்று கூறியிருக்கிறேன் என்றார். அத்தோடு சித்ரா இறந்திட்டாங்க அவங்க பேரை கொச்சப்படுத்திறீங்க நடந்தது நடந்து போச்சு அவங்கள பற்றி பேசிறதால உங்களுக்கு என்ன நல்லது நடக்கப் போகின்றது எனக் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் கூறிய ரேகா எனக்கொரு நன்மையும் இல்லை. நான் எதுக்கு உண்மையை சொல்லாமல் இருக்கணும் சித்ரா நல்லவள் கெட்டவள் என்று சொல்ல வரல ஆனால் அவ இந்த தப்பு எல்லாம் பண்ணினாள். சித்ராவோட அம்மாவுக்கு எல்லாம் தெரியும். இப்போது நடந்து முடிஞ்சதுக்கு பிறகு என் பொண்ணுக்கு இப்பிடி ஆச்சு என்று கதறுவதால் என்ன ஆகப்போகுது என்று கூறியிருந்தார்.

மேலும் சித்ராவில் கொலைக்கு என்ன காரணம் என்று கேட்டபோது சித்ராவின் பேராசை தான் காரணம். சித்ராவின் கொலையில் ஹேமந்திற்கும் சம்மந்தம் இருக்கு அவ ஹொட்டல்ல எல்லாம் சாகல ஹொட்டலுக்கு வரும் போதே அவ உயிரோட இல்லை. வேணும் என்றால் ஹேமந்தை கூப்பிட்டு ஏன் இப்படி பொய் சொல்லுற என்று கேளுங்க என்று கூறினார்.

சித்ராவுடைய கொலை சம்பந்தப்பட்ட எவிடன்ஸ் ஏதோ இருக்கு அதான் இவ்வளவு தன்னம்பிக்கையாக பேசிக்கிட்டு இருக்கிறீங்க என்று கேட்ட போது சித்ரா ரொம்ப ஸ்ரோங்கான பொண்ணு யார் கூடையும் சேர்த்து வைத்து பேசினால் எல்லாம் சாகிற ஆள் கிடையாது எல்லாத்தையும் ஈஸியா எடுத்துப்பா. அதே போல ஹேமந்தின் தில்லாலங்கடி வேலை எல்லாம் தெரியும். இவரை சுத்தியிருக்கிற கூட்டத்தை பற்றி தெரிந்ததாலும் இது தற்கொலை இல்லை கொலை என்பதை சந்தேகப்படாமல் உறுதியாக கூறுகின்றேன் என்றார்.

மேலும் ஹேமந்தை நீங்கள் காதலித்தமையால் தான் இப்படி எல்லாம் சித்ராவுக்கு எதிராகப் பேசிறீங்களாமே என்று கேட்கப்பட்ட போது அவனை நான் காதலிச்சிருந்தால் நிச்சயதார்த்தம் நடக்கும் போதே செருப்பை கழட்டி அடிச்சிருப்பேன். அவன் என்கிட்டையும் இருபதாயிரம் ரூபா வாங்கியிருந்தான். அவன் சரியே இல்லை அவனோட காரெக்டர் என்ன என்று தெரியும். அவன் பற்றியும் சித்ராவுக்கு சொன்னேன். அவ தான் நான் அவன மாத்திடுவேன் என்றாள். அவளோட அதீத காதலால் தான் இப்படி நடந்தீச்சு. ஹேமந்த் வந்து உண்மைய சொன்னால் போதும் இதை யாரெல்லாம் பண்ணினாங்க எப்படி நடந்திச்சு என்று அவன் சொன்னால் மட்டும் தான் தெரிய வரும் என்று கூறியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement