செல்லம்மா சீரியலில் இருந்து முக்கிய நடிகர் விலகி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
சன்டிவியில் ஒளிபரப்பாகிய கேளடி கண்மணி மூலம் அறிமுகமானவர்கள் திவ்யா ஸ்ரீ, அர்னவ் இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்ததாகவும், முன்னதாகவே திருமணம் செய்து கொண்டதாகவும் பல தகவல்கள் வெளியாகின.இதனைத் தொடர்ந்து தனக்கு குழந்தை பிறக்கவுள்ளதாகவும் திவ்யா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அர்னவ் தன்னை அடிப்பதாகவும் செல்வம்மா சீரியல் அஞ்சிதாவுடன் தொடர்பில் இருக்கின்றார் என்றும் கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.தன்னை கணவர் அடித்து துன்புறுத்தியதால் கருக்கலையும் அபாயம் ஏற்பட்டதாக பரபரப்பு புகார் அளித்தார்.
இது குறித்து அர்னவ் மீது வழக்குப்பதியப்பட்டது. ஆனால் இதை முற்றிலும் மறுத்ததோடு திவ்யா மீது அடுக்கடுக்கான புகார்களை கொடுத்தார் அர்னவ்.அத்தோடு அவர் ஒரு சைக்கோ அதனால்தான் இவ்வாறு நடந்து கொள்கிறார் என பல வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார். ஆனால் இது எதுவுமே பலிக்கவில்லை.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் அதிரடியாக போலீஸார் கைது செய்தனர்.இவ்வாறு இருக்கையில் இவர் தற்போது செல்லம்மா சீரியலில் நடித்து வரும் நிலையில் திடீரென அதில் இருந்து விலகி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
Listen News!