• May 19 2024

பாக்கியாவிடம் கையும் களவுமாக பிடிபட்ட செழியன்- அமிர்தாவைப் பார்க்க வீட்டுக்கு வந்த கணேஷ்-Baakiyalakshmi Serial

stella / 7 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா வீட்டுக்கு வரும் கணேஷ் வாசலில் நின்று பாக்கியா வீட்டில் மாட்டியிருக்கும் போட்டோக்களைப் பார்க்கின்றார்.அதில் எழில் மற்றும் அமிர்தாவின் குடும்பப் போட்டோவைப் பார்த்து அதிர்ச்சியடைகின்றார். இவர் இப்படி பார்த்துக் கொண்டிருக்கும் போது பாக்கியா கணேஷ் பின்னாடி நின்று யாராக இருக்கும் என்று யோசிக்கின்றார்.


அப்போது பாக்கியா கணேஷ் முன்னாடி வந்து யாருப்பா நீ எழிலோட பிரெண்டா, உள்ளே வா என்று கூப்பிடுவதோடு எழிலையும் கூப்பிட கணேஷ் கூப்பிட வேணாம் என்று சொல்லி விட்டு ஓடுகின்றார்.பின்னர் கடற்கரையில் நின்று தன்னுடைய பெற்றோருக்து தான் அமிர்தாவைப் பார்த்து விட்டதாகவும் எல்லோரும் சேர்ந்து எனக்கு பொய் சொல்லீட்டீங்க தானே என திட்டுகின்றார்.

அப்போது அவர்கள் திரும்பிவாப்பா என்று சொல்ல, தான் அமிர்தா இல்லாமல் வரமாட்டேன். அமிர்தாவோடையும் நிலாவோடையும் தான் வருவேன் என்று சொல்லி விட்டு போனை கட் செய்கின்றார். தொடர்ந்து ராமமூர்த்தியும் செல்வியும் நிலாவை பூங்காவில் வைத்து கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நிலாவைப் பார்த்து கணேஷ் சந்தோஷப்படுகின்றார்.


மறுபுறம் வீட்டில் இருக்கும் எல்லாப் பொருட்களையும் மாலினி கீழே போட்டு உடைக்கின்றார்.அத்தோடு தன்னுடை வீட்டுக்கு உடனடியாக வரவேண்டும் இல்லை என்றால்இருவரும் சேர்ந்தெடுத்த போட்டோவைக் கொண்டு வந்து காட்டுவேன் என்று வாய்ஸ் மெசேஜ் போடுகின்றார். இதைக் கேட்ட செழியன் அதிர்ச்சியடைகின்றார்.


பின்னர் ஜெனியிடம் பேசி துாங்க வைத்து விட்டு மாலினி வீட்டுக்கு போவதற்காக வந்து கதவைத் திறக்கின்றார். அப்போது பாக்கியா செழியனைக் கண்டு இந்த நேரத்தில் எங்கே போகின்றாய் எனத் திட்டுகின்றார்.அத்தோடு கார் சாவியையும் பறித்து வைத்துக் கொள்கின்றார். இதனால் செழியன் என்ன செய்வதென்று தெரியாமல் யோசிச்சுக் கொண்டு போகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement