• May 05 2024

மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்த பிக்பாஸ் சீசன் 2 பிரபலம்- மீண்டும் காதல் வருமா?

stella / 9 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான்  ராகுல் மகாஜன். இவர் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 2 இலும் கலந்து கொண்டு பிரபல்யமானார்.இவர் கஜகஸ்தானை சேர்ந்த மாடல் அழகியான நடாலியா இலினாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணமாகி நான்கு ஆண்டுகள் கழித்து இலினாவை விவாகரத்து செய்தார்.

 இது குறித்து ராகுலுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது,திருமணமான புதிதில் இருந்தே ராகுலுக்கும், நடாலியாவுக்கும் இடையே பிரச்சினையாக இருந்தது. ஆனாலும் முடிந்த அளவுக்கு ஒன்றாக இருக்க முயற்சி செய்தார்கள். கடந்த ஆண்டு பிரிந்துவிட்டார்கள். அதன் பிறகு விவாகரத்து கோரிவிட்டார்கள் என்றார்.


ராகுலுக்கும், நடாலியாவுக்கும் விவாகரத்து கிடைத்துவிட்டதா இல்லை வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறதா என்பது தெரியவில்லை.இது ராகுல் மகாஜனின் மூன்றாவது திருமணமாகும். முன்னதாக ஸ்வேதா சிங் என்பவரை கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2008ம் ஆண்டு ஸ்வேதாவை பிரிந்துவிட்டார் .

முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த பிறகு ராகுல் துல்ஹனியா லே ஜாயேகா என்கிற டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சந்தித்த டிம்பி கங்குலியை கடந்த 2010ம் ஆண்டு மணந்தார். திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்து ராகுலும், டிம்பியும் பிரிந்துவிட்டார்கள்.

அதன் பிறகே நடாலியாவை காதலித்து மணந்தார் ராகுல். ஆனால் அந்த திருமணமும் நிலைக்கவில்லை. மூன்றாவது மனைவியை பிரிந்த பிறகு ராகுல் நன்றாக இல்லை என்று அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியிருக்கின்றார்.


இது குறித்து ராகுலை தொடர்பு கொண்டபோது அவர் கூறியதாவது,என் தனிப்பட்ட வாழ்க்கையை பிரைவேட்டாக வைக்க விரும்புகிறேன். எதை பற்றியும் கமெண்ட் செய்ய விரும்பவில்லை. என் தனிப்பட்ட வாழ்க்கையில் நடப்பது குறித்து என் நண்பர்களிடமே நான் பேசுவது இல்லை. நான் நலமாக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement