• May 12 2024

இதற்கு மறுப்புத் தெரிவித்ததால் தான் கணவர் வீட்டை விட்டு வந்து விட்டேன்- திருமணம் குறித்து பேசிய பிக்பாஸ் இசைவாணி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி முடிவடைந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை 5 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. பிக்பாஸைப் போல பிக்பாஸ் போட்டியாளர்களையும் ஒன்றித்து பிக்பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. இதனை அடுத்து 6 வது சீசன் எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

மேலும் சீசன் 6 ஐயும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா இல்லது நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வியே அதிகமாகக் காணப்படுகின்றது. இருப்பினும் நிகழ்ச்சி தொடங்கினால் தான் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் சீசன் 5 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் இசைவாணி.அந்த சீனில் முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றது அவர் தான். ஆனால் 49 நாட்களிலேயே இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

பிக் பாஸ் ஷோவில் அவர் தனது கதையை சொல்லும்போது குடும்ப கஷ்டம் மற்றும் ஏழ்மை பற்றி தான் அதிகம் பேசி இருப்பார். ஆனால் திருமணம் பற்றி பேசவே இல்லை. இது பெரிய சர்ச்சை ஆனது.

இந்நிலையில் சமீபத்தில் இசைவாணி அளித்து இருக்கும் பேட்டியில் தான் கணவர் வீட்டை விட்டு வந்ததற்கான காரணத்தை கூறி இருக்கிறார்.வழக்கமாக எல்லா பெற்றோரும் செய்வது போல எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். கானா பாடல் பாட பெற்றோர் வீட்டில் இருந்த ஆதரவு எனக்கு கணவர் வீட்டில் கிடைக்கவில்லை. அதனால் தான் அந்த வீட்டை விட்டு வந்துவிட்டேன்.

தற்போது அவருக்கு வேறு திருமணம் கூட நடந்துவிட்டது. அந்த குடும்பத்துடன் நான் தற்போது தொடர்பில் இல்லை இதனால் தான் அது குறித்து எதுவும் பேசவில்லை என இசைவாணி தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement