• May 19 2024

சமையல் ஆடரை செய்வதற்காக வீட்டை விட்டுக் கிளம்பிய பாக்கியா- ராதிகாவுடன் செம குஷியில் இருக்கும் கோபி

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா சமையல் ஆடரை செய்து முடிப்பதற்காக கிளம்புகின்றார்.இதனால் எல்லோருக்கும் தான் போய்ட்டு வருகினன்றேன் எல்லோரம் கவனமா இருங்க என பல அட்வைஸ்ட்டுகள் கொடுத்து விட்டு கிளம்பிப் போகின்றார். சமையல் செய்பவர்கள் எல்லோரையும் கூட்டிக் கொண்டு கல்யாண வீடு நடக்கும் இடத்திற்குப் போகின்றனர்.


அங்கே போனதுமு் கல்யாண மண்டபத்தைப் பார்த்து எல்லோரும் பிரமித்துப் போகின்றனர்.அத்தோடு பாக்கியா தங்க வேண்டிய ரூமையும் காட்ட செல்லி சந்தோசப்படுகின்றார். தொடர்ந்து பழனிச்சாமிக்கு போன் செய்து தாம் வந்த விடயத்தைச் சொல்ல பழனிச்சாமி தானும் வந்து கொண்டிருக்கும் விஷயத்தைச் சொல்கின்றார்.

தொடர்ந்து கல்யாண வீட்டுக்கு வரும் பழனிச்சாமி தன்னுடைய நண்பர் சுதாகரைச் சந்திக்கின்றார். அவரைக் கண்டதும் கட்டிப்பிடித்து நலம் விசாரிக்கின்றார். அம்மாவைத் தான் கூட்டிட்டு வர முடில அவங்களுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்கின்றார். அப்போது சுதாகர் என் பொண்ணுக்கே கல்யாணம் நடக்கப் போகுது நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போகிறாய் என்று கேட்க பழனிச்சாமி சமாளித்து விட்டு அங்கிருந்து கிளம்புகின்றார்.

தொடர்ந்து பாக்கியாவைப் பார்க்கும் பழனிச்சாமி திருமணம் யாருக்கு என்ற விடயத்தையும் சொல்லி விட்டு தன்னுடைய நண்பரிடம் பாக்கியாவை அறிமுகப்படுத்தி வைக்கின்றார். பாக்கியாவைப் பார்த்த அவரது நண்பர் குடும்பத்தினர் இவங்கள பார்க்க நல்லா சமைக்கிறவங்க மாதிரி தெரியலையே எனச் சந்தேகப்படுகின்றார்கள்.


இதனால் பழனிச்சாமி, அப்படி எலலாம் யோசிக்காதீங்க அவங்க நல்லாவே சமைப்பாங்க என பாக்கியாவுக்கு ஆதரவாகப் பேசி அவர்களைச் சமாளிக்கின்றார்.தொடர்ந்து கோபி ராதிகாவுடன் காரில் போகும் போது இளையராஜாவின் பாட்டுக் கேட்டுக் கொண்டு போகின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement