• May 09 2024

செழியனை போன் பண்ணி திட்டிய பாக்கியா- அமிர்தாவால் கணேஷின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி- கோபத்தில் கோபி -Baakiyalakshmi Serial

stella / 7 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா விதம் விதமான உணவுகளை ஆடர் பண்ணியதால் ஆச்சரியமதகப் பார்த்த ஈஸ்வரி பின்னர் இனியா செல்வி பாக்கியா எல்லோருடனனும் சேர்ந்து சாப்பிடுகின்றார். மறுபுறம் கணேஷை காணவில்லை என்று அவரது அம்மா தேடிட்டு இருக்கும் போது அமிர்தான போன் பண்ணி பேசுகின்றார். அத்தோடு கணேஷ் தன்னுடைய கனவில் வந்து துரத்திய விஷயத்தையும் சொல்கின்றார்.


இதைக் கேட்டவுடன் அவர்கள் அதிர்ச்சியடைகின்றனர். அப்போது எழிலும் வாங்கிப் பேசுகின்றார். கணேஷ் எதற்காக அமிர்தாவை துரத்தனும் அதை சொன்னால் இவங்க கவலைப்பட்டிட்டே இருக்கிறாங்க,நானே பார்த்துக் கொள்கின்றேன் என்கின்றார். அப்போது அங்கு வரும் கணேஷ் அமிர்தா வீட்டுக்கு போனதாகவும் அவங்களுடைய வீடு பூட்டி இருக்கும் விஷயத்தையும் சொல்கின்றார்.இதனால் அவருடைய பெற்றோர் என்ன செய்வதென்று யோசிக்கின்றனர்.

தொடர்ந்து செழியனுக்கு போன் பண்ணும் பாக்கியா செழியனை எங்கு இருக்கின்றாய் என விசாரிக்கின்றார்.அத்தோடு நீ ஜெனியைப் போய் பார்க்கவே இல்லையாமே, மரியாதையாக இப்பவே போய் பாரு என்று சொல்ல,செழியனும் தானும் இப்பவே போய் பார்க்கிறேன் என்கின்றார். பின்னர் பாக்கியா எதற்காக செழியனிடம் சண்டை போட்ட என ஈஸ்வரி கேட்க அவன் ஜெனியைப் போய் பார்க்கவே இல்லை அதான் திட்டி அனுப்பிட்டு வருகின்றேன் என்கின்றார்.


அத்தோடு காலைல சீக்கிரமாக கிளம்பனும் எல்லாத்தையும் பார்த்து எடுத்து வைத்துக் கொள்ளுங்க என்கின்றார். மறுபுறம் ஜெனியைப் பார்க்க போன செழியனிடம் ஜெனி நைட்டுக்கு நீ என் கூட தங்குவியா என்று கேட்க முதலில் நோ சொன்ன செழியன் பின்னர் நிற்கின்றேன் என்று சொல்ல ஜெனி செழியன் தோளில் சாய்ந்து பேசுகின்றார்.


பின்னர் விடிந்ததும் எல்லோரும் கிளம்ப கோபி ஈஸ்வரிக்கு போன் பண்ணி பேசுகின்றார். பின்னர் இனியாவுக்கும் போன் பண்ணி பேசி ஏதும் பிரச்சினை என்றால் போன் எடுங்க என்கின்றார். அப்போது கோபி பாக்கியாவிடம் போனைக் கொடுக்க சொல்ல பாக்கியாவும் வாங்கிப் பேச கோபி என் அம்மாவையும் பொண்ணையும் பத்திரமாக கொண்டு வந்து சேர்க்கல என்றால் நடக்கிறதே வேற என்று சொல்ல பாக்கியா திரும்ப பேசுகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement