• May 19 2024

அர்ஜுனை தமிழ் அடித்ததற்கு என்ன காரணம் என அறிந்த ராகினி- கோபப்பட்டு திட்டிய சரஸ்வதி-குழப்பத்தில் கோதை-Thamizhum Saraswathiyum Serial

stella / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஹாஸ்பிட்டலில் அர்ஜுனின் அக்காவுமம் அம்மாவும் தமிழை போலீஸ்ல பிடிச்க் கொடுத்திருக்கலாம் தானே என்று கேட்க, அர்ஜுன் அவனை போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்தால் நானும் தான் மாட்டிக் கொள்வேன். நாம தான் அவன் கிட்ட சண்டைக்குப் போனோம் என்கின்றார்.தொடர்ந்து கோதை எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறுகின்றார்.


அப்போது நடேசன், அர்ஜுன் என்ன சொன்னாலும் நீ எதுக்கு சண்டைக்கு போற அவன் என்ன சொன்னாலும் சைலண்டாக போக வேண்டியது தானே என்று தமிழைக் கேட்க, நமச்சி அவன் அம்மா பற்றி தப்பா பேசினான் அதான் அவன் அடிச்சான் என்று சொல்ல, சரஸ்வதி அவன் எப்பிடி அத்தையைப் பற்றி தப்பா பேசலாம் என்று கேட்க நமச்சி உங்களுக்கும் கோபம் வருது தானே.

அப்பிடித் தான் தமிழுக்கும் கோபம் வந்திச்சு அதான் அடிச்சான் என்று சொல்ல கோதை தமிழைப் பார்க்கின்றார். பின்னர் சாப்பிட்டு முடித்ததும் கோதையும் நடேசனும் பேசிக் கொள்கின்றனர். அப்போது நடேசன் பார்த்தியாம்மா தமிழ் உன்மேல எவ்வளவு பாசமாக இருக்கிறான் என்று சொல்ல, கோதை ராகினி எங்களை நம்பாமல் அனுப்பிய போது தான் தமிழையும் நாம அனுப்பும் போது அவன் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான் என்று தெரிஞ்சிச்சு என்று வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கின்றார்.

மபுறம் சரஸ்வதியிடம் தமிழ் தண்ணீர் கேட்கின்றார். அப்போது சரஸ்வதி கொண்டு வந்து கொடுக்க எல்லா வேலையும் முடிந்து விட்டதா என்று கேட்க சரஸ்வதி பாத்திரம் மட்டும் கழுவனும் என்கின்றார். ஆனால் கால் ரொம்ப வலிக்குது என்று சொல்ல,காலைல வேலை செஞ்சுக்கலாம் நீ போய் துாங்கு என்கின்றார்.


மறுபுறம் வசுவிடம் கார்த்தி நாளைக்கு சீக்கிரமா போகனும். அப்போ தான் வேலை தேட முடியும் என்று சொல்ல வசு, அபி கிட்ட சொல்லி உங்க டொகிமென்ஸ் எல்லாம் வாங்கிக்கலாம் என்று சொல்கின்றார். இதை தமிழ் கேட்டுக் கொண்டு நிற்கின்றார். பின்னர் விடிந்ததும் எல்லோரும் எழும்ப முதல் கோதை எழும்பி வீட்டு வேலை எல்லாம் செய்ததோடு எல்லோருக்கும் டீ போட்டுக் கொடுக்க எல்லோரும் குடிக்கின்றனர்.

மறுபுறம் அபி ராகினியிடம் சென்று தமிழ் கோதை அம்மாவைப் பற்றி தப்பா பேசினதால் தான் அர்ஜுனை அடிச்சாரு என்று சொல்ல, ராகினி போய் அர்ஜுனைக் கேட்கின்றார். அப்போது அவரது மாமா நான் தான் அம்மா பற்றி பேசினேன். அதுக்கு இப்பிடியா பண்ணுவாங்க என்று கேட்க ராகினி, நீங்க அம்மா பற்றி பேசினதால தான் அர்ஜுனை தமிழ் அடிச்சிருக்கிறான் என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement